search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kallalagar"

    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜபெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜபெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    மாலையில் கல்யாணசுந்தரவள்ளி தாயாருக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது. இதைதொடர்ந்து உற்சவர் தாயார் புறப்பாடு மேளதாளம் முழங்க நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    இதற்காக நவராத்திரி கொலுமண்டபம் வண்ண விளக்குகளாலும், தோரணங்களும், கதம்ப மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
    அழகர்கோவிலில் நடந்த திருபவுத்திர திருவிழாவில் 108 கலச நூபுர கங்கை தீர்த்தத்தால் கள்ளழகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ளது கள்ளழகர் கோவில். இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஒன்று திருபவுத்திரவிழா. இந்தவிழா அங்குள்ள சுந்தரபாண்டியன் கொறடு மண்டபத்தில் நேற்று முழங்க தொடங்கியது. இங்கு உற்சவர் கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் அங்கு எழுந்தருளினார்.

    அப்போது கீழே தானியங்கள் விரிக்கப்பட்டு அதன்மீது நூபுரகங்கை தீர்த்தம், அபூர்வ மூலிகைகள் அடங்கிய 108 கலசங்கள் தனித்தனியே வைக்கப்பட்டு தேங்காய்,வாழைப்பழம், மாவிலை, பூக்கள், மாலைகள் வைக்கப்பட்டு இருந்தன. தொடர்ந்து 135 அபூர்வ மூலிகைகள், திரவியங்கள் அழகர்மலை உச்சியில் உள்ள நூபுரகங்கை தீர்த்தத்துடன் சேர்க்கப்பட்டு பெருமாளுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன.

    அப்போது திருப்பட்டு நூல்களால் ஆன வண்ணப்பட்டு மாலைகள் வைத்து பூஜைகள் நடந்தது. பின்னர் தீபதூப ஆராதனைகளும், திருமஞ்சனமும், அலங்காரமும் நடைபெற்றது.அதைதொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட பட்டு நூல் மாலைகளை மூலவர் சுந்தரராஜபெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, கல்யாணசுந்தரவள்ளி தாயார் மற்றும் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு விஷேச பூஜைகள் நடந்தன. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழா வருகிற 26-ந்தேதி நிறைவுபெறுகிறது.

    இந்த திருவிழா குறித்து கோவில்பட்டர் சுந்தரநாராயணன் அம்பி கூறியதாவது:- உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், அணைகளில் தொடர்ந்து நீர்மட்டம் உயரவும், பருவ மழை பெய்து கண்மாய், குளங்கள் நிறையவும் இந்த கலசங்கள் வைத்து அபூர்வ மூலிகைகள் நிறைந்த திரவியத்துடன் அழகர்மலை உச்சியில் இருந்துவரும் நூபுரகங்கை தீர்த்தத்துடன் சேர்த்து கள்ளழகர் சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்வது இந்த திருபவுத்திர திருவிழாவின் தனிசிறப்பாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர். 
    மதுரையை அடுத்துள்ள அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் முப்பழ உற்சவ விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    108 வைணவ திருத்தலங்களில் சிறப்பம்சம் பொருந்தியதும், திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று போற்றி புகழ்ந்து பெருமை படைத்ததுமானது அழகர்கோவில். இங்கு வற்றாத புனித தீர்த்தமான நூபுரகங்கையுடன் அருள்பாலித்து வருவது கள்ளழகர் கோவிலாகும். இங்கு ஆண்டு முழுவதும், மாதந்தோறும் ஒவ்வொருவிதமான திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதில் முக்கிய அம்சமாக கருதப்படும் திருவிழாக்களில் ஆண்டு தோறும் ஆனி மாதம் நடைபெறும் முப்பழ உற்சவ விழாவும் ஒன்று. இந்தாண்டுக்கான முப்பழ உற்சவ விழா நேற்று கள்ளழகர் கோவிலில் நடந்தது. அதில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, அலங்காரம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து மா, பலா, வாழை ஆகிய முப்பழங்களும் ஒருசேர ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத கள்ளழகர் பெருமாளுக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்து நெய்வேத்தியம் செய்யப்பட்டது. இதில் உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

    இதேபோல இந்த கோவிலின் உபகோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலிலும் முப்பழ உற்சவ விழா நடந்தது. கோவில்களில் நடைபெற்ற இந்த விழாவில் பக்தர்களுக்கு பிரசாதமாக முப்பழங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து உள்பட கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செயதிருந்தனர்.

    ×