என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அழகர்கோவிலில் 108 கலச நூபுர கங்கை தீர்த்தத்தால் கள்ளழகருக்கு அபிஷேகம்
Byமாலை மலர்23 Aug 2018 5:29 AM GMT (Updated: 23 Aug 2018 5:29 AM GMT)
அழகர்கோவிலில் நடந்த திருபவுத்திர திருவிழாவில் 108 கலச நூபுர கங்கை தீர்த்தத்தால் கள்ளழகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ளது கள்ளழகர் கோவில். இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஒன்று திருபவுத்திரவிழா. இந்தவிழா அங்குள்ள சுந்தரபாண்டியன் கொறடு மண்டபத்தில் நேற்று முழங்க தொடங்கியது. இங்கு உற்சவர் கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் அங்கு எழுந்தருளினார்.
அப்போது கீழே தானியங்கள் விரிக்கப்பட்டு அதன்மீது நூபுரகங்கை தீர்த்தம், அபூர்வ மூலிகைகள் அடங்கிய 108 கலசங்கள் தனித்தனியே வைக்கப்பட்டு தேங்காய்,வாழைப்பழம், மாவிலை, பூக்கள், மாலைகள் வைக்கப்பட்டு இருந்தன. தொடர்ந்து 135 அபூர்வ மூலிகைகள், திரவியங்கள் அழகர்மலை உச்சியில் உள்ள நூபுரகங்கை தீர்த்தத்துடன் சேர்க்கப்பட்டு பெருமாளுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன.
அப்போது திருப்பட்டு நூல்களால் ஆன வண்ணப்பட்டு மாலைகள் வைத்து பூஜைகள் நடந்தது. பின்னர் தீபதூப ஆராதனைகளும், திருமஞ்சனமும், அலங்காரமும் நடைபெற்றது.அதைதொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட பட்டு நூல் மாலைகளை மூலவர் சுந்தரராஜபெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, கல்யாணசுந்தரவள்ளி தாயார் மற்றும் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு விஷேச பூஜைகள் நடந்தன. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழா வருகிற 26-ந்தேதி நிறைவுபெறுகிறது.
இந்த திருவிழா குறித்து கோவில்பட்டர் சுந்தரநாராயணன் அம்பி கூறியதாவது:- உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், அணைகளில் தொடர்ந்து நீர்மட்டம் உயரவும், பருவ மழை பெய்து கண்மாய், குளங்கள் நிறையவும் இந்த கலசங்கள் வைத்து அபூர்வ மூலிகைகள் நிறைந்த திரவியத்துடன் அழகர்மலை உச்சியில் இருந்துவரும் நூபுரகங்கை தீர்த்தத்துடன் சேர்த்து கள்ளழகர் சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்வது இந்த திருபவுத்திர திருவிழாவின் தனிசிறப்பாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.
அப்போது கீழே தானியங்கள் விரிக்கப்பட்டு அதன்மீது நூபுரகங்கை தீர்த்தம், அபூர்வ மூலிகைகள் அடங்கிய 108 கலசங்கள் தனித்தனியே வைக்கப்பட்டு தேங்காய்,வாழைப்பழம், மாவிலை, பூக்கள், மாலைகள் வைக்கப்பட்டு இருந்தன. தொடர்ந்து 135 அபூர்வ மூலிகைகள், திரவியங்கள் அழகர்மலை உச்சியில் உள்ள நூபுரகங்கை தீர்த்தத்துடன் சேர்க்கப்பட்டு பெருமாளுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன.
அப்போது திருப்பட்டு நூல்களால் ஆன வண்ணப்பட்டு மாலைகள் வைத்து பூஜைகள் நடந்தது. பின்னர் தீபதூப ஆராதனைகளும், திருமஞ்சனமும், அலங்காரமும் நடைபெற்றது.அதைதொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட பட்டு நூல் மாலைகளை மூலவர் சுந்தரராஜபெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, கல்யாணசுந்தரவள்ளி தாயார் மற்றும் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு விஷேச பூஜைகள் நடந்தன. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழா வருகிற 26-ந்தேதி நிறைவுபெறுகிறது.
இந்த திருவிழா குறித்து கோவில்பட்டர் சுந்தரநாராயணன் அம்பி கூறியதாவது:- உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், அணைகளில் தொடர்ந்து நீர்மட்டம் உயரவும், பருவ மழை பெய்து கண்மாய், குளங்கள் நிறையவும் இந்த கலசங்கள் வைத்து அபூர்வ மூலிகைகள் நிறைந்த திரவியத்துடன் அழகர்மலை உச்சியில் இருந்துவரும் நூபுரகங்கை தீர்த்தத்துடன் சேர்த்து கள்ளழகர் சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்வது இந்த திருபவுத்திர திருவிழாவின் தனிசிறப்பாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X