search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alagar kovil"

    மதுரை வந்த கள்ளழகரை மூன்றுமாவடியில் பக்தர்கள் எதிர்சேவை கொண்டு வரவேற்றனர். இந்த எதிர்சேவை நிகழ்ச்சியை காண ஏராளமானோர் திரண்டு நின்றனர்.
    மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை காணவும், மண்டூக மகரிஷிக்கு சாபவிமாசனம் அளிக்கவும் அழகர்மலையில் இருந்து கள்ளழகர் மதுரை வரும், வைகை ஆற்றில் எழுந்தருளுவதும் சிறப்பு வாய்ந்த ஒன்று.

    ஆண்டுதோறும் கோலா கலமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் மதுரையில் திரள்வது உண்டு.

    இந்த ஆண்டும் விழா தொடங்கியது முதல் மதுரை நகரில் மக்கள் குவிய தொடங்கினர். நேற்று அழகர்மலையில் இருந்து கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் புறப்பட்டது முதல் அவரது பின்னால் தொண்டர்படையாக பக்தர்கள் கூட்டம் வந்த வண்ணம் உள்ளது. கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் துள்ளலாட்டம் போட்டு அழகரின் முன்பு வலம் வந்தனர். வழிநெடுக பல்வேறு மண்டகப்படிகளிலும் அழகருக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப் பதி, சுந்தரராஜன்பட்டி வழியாக மதுரை நகருக்கு வரும் கள்ளழகர் இன்று காலை 6 மணிக்கு மூன்று மாவடி வந்தார். அங்கு அவரை பக்தர்கள் எதிர் கொண்டு வரவேற்றனர். இந்த எதிர்சேவை நிகழ்ச்சியை காண ஏராளமானோர் திரண்டு நின்றனர்.

    கள்ளழகர் வீதிஉலா வந்த போது அவருக்கு முன்னால் ஏராளமான உண்டியல்கள் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன. அவற் றில் பக்தர்கள் காணிக்கை செலுத்தி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். இன்று இரவு 9 மணிக்கு கள்ளழகர் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் எழுந்தருளுகிறார். அங்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண் டாள் சூடிகொடுத்த மங்கல மாலை மற்றும் பொருட் களை அணிந்து கொள்கிறார்.

    இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து நேற்று இரவு ஆண்டாளுக்குரிய விசே‌ஷ மாலை, கிளி, புதுவஸ்திரம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் சிறப்பு வழிபாடுக்கு பின்னர் மதுரைக்கு புறப்பட்டது.

    இந்த மங்கல பொருட்களை சூடிக்கொள்ளும் கள்ளழகர் நாளை (வெள்ளிக் கிழமை) அதிகாலை 3 மணிக்கு தல்லாகுளம் கருப்பணசாமி கோவில் ஆயிரம்பொன் சப்பரத்தில் எழுந்தருளுகிறார்.

    பின்னர் அங்கிருந்து தங்ககுதிரை வாகனத்தில் புறப்பட்டு காலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார்.
    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜபெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
    அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜபெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    மாலையில் கல்யாணசுந்தரவள்ளி தாயாருக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது. இதைதொடர்ந்து உற்சவர் தாயார் புறப்பாடு மேளதாளம் முழங்க நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    இதற்காக நவராத்திரி கொலுமண்டபம் வண்ண விளக்குகளாலும், தோரணங்களும், கதம்ப மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
    அழகர்கோவில் ஆடிப்பெருந் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி தேரோட்டம் இன்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் ஆடிப்பெருந் திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா தொடங்கிய நாளில் இருந்து தினமும் காலை, மாலையில் சுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சிம்மம், அன்னம், அனுமார், சே‌ஷ, குதிரை, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடி தேரோட்டம் இன்று (27-ந் தேதி) நடந்தது. அதிகாலையில் பெருமாள், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

    பின்னர் காலை 6.20 மணிக்கு கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் தேரில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து கோவிந்தா... கோவிந்தா... என்ற கோ‌ஷத்துடன் தேரோட்டம் தொடங்கியது.

    அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கலெக்டர் வீரராகவ ராவ், பெரிய புள்ளான் எம்.எல்.ஏ., கோவில் தக்கார் வெங்கடாச்சலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து, ஜமீன்தார் சண்முக ராஜபாண்டியன் மற்றும் முக்கிய பிரமுகர்களை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    இதில் மதுரை, திண்டுக்கல் மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். காலை 8. 55 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. அமைச்சர், கலெக்டர் இறுதி வரை தேரை இழுத்தனர்.

    இன்று மாலை பூப்பல்லக்கு நடக்கிறது. சந்திர கிரகணத்தையொட்டி மாலை 4 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வருகிற 11-ந் தேதி ஆடி அமாவாசையன்று கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும்.

    ×