search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை மூன்றுமாவடியில் கள்ளழகருக்கு பக்தர்கள் எதிர்சேவை
    X

    மதுரை மூன்றுமாவடியில் கள்ளழகருக்கு பக்தர்கள் எதிர்சேவை

    மதுரை வந்த கள்ளழகரை மூன்றுமாவடியில் பக்தர்கள் எதிர்சேவை கொண்டு வரவேற்றனர். இந்த எதிர்சேவை நிகழ்ச்சியை காண ஏராளமானோர் திரண்டு நின்றனர்.
    மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை காணவும், மண்டூக மகரிஷிக்கு சாபவிமாசனம் அளிக்கவும் அழகர்மலையில் இருந்து கள்ளழகர் மதுரை வரும், வைகை ஆற்றில் எழுந்தருளுவதும் சிறப்பு வாய்ந்த ஒன்று.

    ஆண்டுதோறும் கோலா கலமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் மதுரையில் திரள்வது உண்டு.

    இந்த ஆண்டும் விழா தொடங்கியது முதல் மதுரை நகரில் மக்கள் குவிய தொடங்கினர். நேற்று அழகர்மலையில் இருந்து கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் புறப்பட்டது முதல் அவரது பின்னால் தொண்டர்படையாக பக்தர்கள் கூட்டம் வந்த வண்ணம் உள்ளது. கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் துள்ளலாட்டம் போட்டு அழகரின் முன்பு வலம் வந்தனர். வழிநெடுக பல்வேறு மண்டகப்படிகளிலும் அழகருக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப் பதி, சுந்தரராஜன்பட்டி வழியாக மதுரை நகருக்கு வரும் கள்ளழகர் இன்று காலை 6 மணிக்கு மூன்று மாவடி வந்தார். அங்கு அவரை பக்தர்கள் எதிர் கொண்டு வரவேற்றனர். இந்த எதிர்சேவை நிகழ்ச்சியை காண ஏராளமானோர் திரண்டு நின்றனர்.

    கள்ளழகர் வீதிஉலா வந்த போது அவருக்கு முன்னால் ஏராளமான உண்டியல்கள் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன. அவற் றில் பக்தர்கள் காணிக்கை செலுத்தி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். இன்று இரவு 9 மணிக்கு கள்ளழகர் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் எழுந்தருளுகிறார். அங்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண் டாள் சூடிகொடுத்த மங்கல மாலை மற்றும் பொருட் களை அணிந்து கொள்கிறார்.

    இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து நேற்று இரவு ஆண்டாளுக்குரிய விசே‌ஷ மாலை, கிளி, புதுவஸ்திரம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் சிறப்பு வழிபாடுக்கு பின்னர் மதுரைக்கு புறப்பட்டது.

    இந்த மங்கல பொருட்களை சூடிக்கொள்ளும் கள்ளழகர் நாளை (வெள்ளிக் கிழமை) அதிகாலை 3 மணிக்கு தல்லாகுளம் கருப்பணசாமி கோவில் ஆயிரம்பொன் சப்பரத்தில் எழுந்தருளுகிறார்.

    பின்னர் அங்கிருந்து தங்ககுதிரை வாகனத்தில் புறப்பட்டு காலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார்.
    Next Story
    ×