search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமண கோலத்தில் லட்சுமி நாராயண பெருமாள் வீற்றிருந்த காட்சி.
    X
    திருமண கோலத்தில் லட்சுமி நாராயண பெருமாள் வீற்றிருந்த காட்சி.

    பழனி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

    பழனி முருகன் கோவிலின் உப கோவிலான லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
    பழனி முருகன் கோவிலின் உப கோவிலான லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகளும், இரவு 7 மணிக்கு கருடன், ஆஞ்சநேயர், தங்க குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சாமி புறப்படுதல் நடைபெற்றது.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை 6 மணிக்கு லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி சன்னதியில் அலங்கரிக்கப்பட்ட திருமண மேடையில் சாமி வீற்றிருந்தார். அங்கு மாலை மாற்றும் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபாலு மற்றும் உபயதாரர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
    Next Story
    ×