search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஐ.பி.எல். 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 145 ரன்களை இலக்காக நிர்ணயித்த ராஜஸ்தான் ராயல்ஸ்
    X

    ஐ.பி.எல். 2024: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 145 ரன்களை இலக்காக நிர்ணயித்த ராஜஸ்தான் ராயல்ஸ்

    • ரியான் பராக் சிறப்பாக ஆடி 48 ரன்களை குவித்தார்.
    • சாம் கர்ரன், ஹர்ஷல் பட்டேல், ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. கவுகாத்தியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய ராஜஸ்தான் அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. துவக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களுக்கும், டாம் கோலர் கேட்மோர் 18 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 15 பந்துகளில் 18 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். ரியான் பராக் பொறுப்பாக ஆடினார்.


    அடுத்து களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் 28 ரன்களை அடித்து அவுட் ஆனார். துருவ் ஜூரெல் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இவர்களை தொடர்ந்து வந்த ரோவ்மேன் போவெல் 4 ரன்களிலும், டொனோவன் ஃபெரைரா 7 ரன்களிலும் அவுட் ஆகினர். போட்டி முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை குவித்துள்ளது.

    பஞ்சாப் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சாம் கர்ரன், ஹர்ஷல் பட்டேல் மற்றும் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    Next Story
    ×