search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    முதல்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த நடிகர் சிவகார்த்திகேயன்
    X

    முதல்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த நடிகர் சிவகார்த்திகேயன்

    • ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், மாவீரன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'எஸ்கே21' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.


    'எஸ்கே21' படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இப்படம் குறித்த புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, 75 நாட்களாக காஷ்மீரில் நடைபெற்று வந்த இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளனர்.





    Next Story
    ×