search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வடிவேலுவின் தாயார் மறைவு.. பன்னீர் செல்வம் இரங்கல்..
    X

    பன்னீர் செல்வம்

    வடிவேலுவின் தாயார் மறைவு.. பன்னீர் செல்வம் இரங்கல்..

    • மதுரை விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார்.
    • இவரது மறைவிற்கு வருத்தம் தெரிவித்து ஓ. பன்னீர் செல்வம் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா நேற்று இரவு உடல்நலக்குறைவால் காலமானார். மதுரை விரகனூரில் வசித்து வந்த 87 வயதாகும் சரோஜினி வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.




    இந்நிலையில் வடிவேலுவின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நகைச்சுவை நடிகர் திரு.வடிவேலு அவர்களின் அன்புத் தாயார் சரோஜினி அம்மையார் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


    Next Story
    ×