search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தன்னை பாதுகாப்பாக அழைத்து சென்ற போலீசாரை அழைத்து பாராட்டிய ரஜினி
    X

     ரஜினிகாந்த்

    தன்னை பாதுகாப்பாக அழைத்து சென்ற போலீசாரை அழைத்து பாராட்டிய ரஜினி

    • 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.
    • இதன் தொடக்க விழாவில் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    நேற்று முதல் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர்.


    செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் தன் மகள் ஐஸ்வர்யாவுடன் கலந்து கொண்டார். மேலும், கவிஞர் வைரமுத்து, நடிகர் கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


    இந்நிலையில் செஸ் போட்டியின் தொடக்க விழாவுக்கு தன்னை வீட்டிலிருந்து பாதுகாப்பாக அழைத்துச்சென்ற போலீஸாரை வீட்டுக்கு அழைத்து ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். அந்த சந்திப்பில் அவர்கள் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×