என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பிரபல இயக்குனருடன் ஹாட்ரிக் கூட்டணி.... உறுதி செய்த நயன்தாரா
Byமாலை மலர்16 Aug 2021 6:10 AM GMT (Updated: 16 Aug 2021 6:10 AM GMT)
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘லூசிபர்’. இந்த படத்தில் நடிகர் மோகன்லால் அரசியல்வாதியாகவும், அண்டர்கிரவுண்ட் கேங்ஸ்டராகவும் நடித்து அசத்தி இருந்தார். தற்போது லூசிபர் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் சிரஞ்சீவி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரபல இயக்குனர் மோகன் ராஜா இந்த படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நயன்தாரா, மோகன் ராஜா
இப்படத்தில் நடிகை நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அது உறுதியாகி உள்ளது. சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். இதன்மூலம் நடிகை நயன்தாரா, இயக்குனர் மோகன் ராஜாவுடன் 3-வது முறையாக இணைந்து பணியாற்ற உள்ளார். ஏற்கனவே மோகன் ராஜா இயக்கிய தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற படங்களில் நயன்தாரா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X