search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    மீடூ வி‌ஷயத்தில் இந்தி சினிமா முன்மாதிரி - பார்வதி
    X

    மீடூ வி‌ஷயத்தில் இந்தி சினிமா முன்மாதிரி - பார்வதி

    திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பார்வதி, மீடூ வி‌ஷயத்தில் இந்தி சினிமா முன்மாதிரியாக இருக்கிறது என்று பேசியிருக்கிறார். #MeToo #Parvathi
    பூ, மரியான் படங்களில் நடித்து நல்ல நடிகை என பெயர் எடுத்த பார்வதி தமிழ் சினிமாவில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களால் மலையாளத்தில் நடித்து வருகிறார்.

    மும்பையில் நடைபெற்றுவரும் திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பார்வதி மீடூ பற்றி பேசினார். ’மீடூ வி‌ஷயத்தில் இந்தி சினிமா ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. இந்தியில் வெற்றி பெற்ற தயாரிப்பாளர்கள், நடிகர்கள் முன்வந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.

    மலையாளத் திரையுலகில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு திரையுலகிலும் இந்த நிலை இல்லை. அவர்களுடைய குரல் இந்த விவகாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்கிறது. இது பாராட்டத்தக்க வி‌ஷயம். மற்ற இடங்களில் பெரும் அமைதியே நிலவுகிறது.

    அதே நேரத்தில் மலையாளத்தில் உருவாகியுள்ள ‘விமென்ஸ் சினிமா கலெக்டிவ்’ போன்ற அமைப்பு பாலிவுட்டிலும் தொடங்கப்பட வேண்டும்‘. இவ்வாறு அவர் பேசினார்.

    இந்தியில் மீடூவில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் பணிபுரிவதில்லை என்ற முடிவை முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள் எடுத்து வருகின்றனர். இதைத்தான் பார்வதி குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×