search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ராஜமவுலி இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் மணிரத்னம் பட நடிகை
    X

    ராஜமவுலி இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் மணிரத்னம் பட நடிகை

    மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’, மற்றும் தற்போது உருவாகி ‘செக்கச்சிவந்த வானம்’ ஆகிய படங்களில் நடித்து வரும் அதிதி ராவ், ராஜமவுலி இயக்கத்தில் நடிக்க ஆசை இருப்பதாக கூறியிருக்கிறார். #AditiRao
    நடிகை அதிதி ராவ் தமிழில் 2007ஆம் ஆண்டு ‘சிருங்காரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின் பாலிவுட் படங்களிலேயே அதிக கவனம் செலுத்தி வந்தார்.

    மீண்டும் பத்து வருட இடைவெளிக்குப் பிறகு மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் நல்ல அறிமுகம் கிடைத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் மணிரத்னம் இயக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார்.

    கடந்த ஜூன் 15ஆம் தேதி வெளியான ‘சம்மோஹனம்’ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகியுள்ளார் அதிதி. அப்படத்தில் அவரது நடிப்பை இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட பலரும் பாராட்டியிருந்தனர்.

    இந்நிலையில் தனது ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த அதிதி ராவ் ராஜமவுலியின் பாராட்டு குறித்து கூறுகையில், “அவரது பாராட்டு காவிய கதை சொல்லின. அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தையும் தூண்டிவிட்டுள்ளது.



    ஏற்கனவே மணிரத்னம், சஞ்சய் லீலா பன்சாலி எனப் பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்துள்ள எனக்கு ராஜமவுலி படத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவும், விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×