என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நவம்பரில் ரிலீசாகும் செல்வராகவனின் `நெஞ்சம் மறப்பதில்லை'
Byமாலை மலர்7 Oct 2017 7:03 AM GMT (Updated: 7 Oct 2017 7:03 AM GMT)
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா நடிப்பில் உருவாகி பலமுறை தள்ளிப்போகி வரும் `நெஞ்சம் மறப்பதில்லை' படம் விரைவில் ரிலீஸாக இருப்பதாக கூறப்படுறது.
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’.
ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பலமுறை தொடர்ந்து தள்ளிப்போகி வருவதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 3 வருட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் என்பதால், ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா மனைவியாக நந்திதா ஸ்வேதா நடித்திருக்கிறார். திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா பேயாக நடித்திருக்கிறார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு அரவிந்த கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் படத்தை வருகிற நவம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நவம்பர் 3-ஆம் தேதியில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அதே தேதியில் சுசீந்திரனின் `நெஞ்சில் துணிவிருந்தால்', சுசிகணேசனின் `திருட்டு பயலே 2' படங்கள் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை கவுதம் மேனனின் ஒன்ராகா என்டர்டெயின்ட்மண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் சார்பில் மதன் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பலமுறை தொடர்ந்து தள்ளிப்போகி வருவதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 3 வருட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் என்பதால், ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா மனைவியாக நந்திதா ஸ்வேதா நடித்திருக்கிறார். திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா பேயாக நடித்திருக்கிறார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு அரவிந்த கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் படத்தை வருகிற நவம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நவம்பர் 3-ஆம் தேதியில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அதே தேதியில் சுசீந்திரனின் `நெஞ்சில் துணிவிருந்தால்', சுசிகணேசனின் `திருட்டு பயலே 2' படங்கள் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை கவுதம் மேனனின் ஒன்ராகா என்டர்டெயின்ட்மண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் சார்பில் மதன் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X