என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நான் அரசியலுக்கு வருவது பற்றி பேசிக்கொண்டு இருக்கிறேன்: ரஜினிகாந்த்
Byமாலை மலர்23 Jun 2017 3:49 AM GMT (Updated: 23 Jun 2017 3:49 AM GMT)
நான் அரசியலுக்கு வருவது பற்றி பேசிக்கொண்டு இருக்கிறேன். இன்னும் எந்தவித முடிவும் எடுக்கவில்லை. முடிவு எடுத்தால் உங்களிடம் தெரிவிக்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த், கடந்த மாதம் சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது ரசிகர்கள் மத்தியில் அவர் பேசியது, அவர் அரசியலுக்கு வருவாரா?, மாட்டாரா? என்ற பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன்பிறகு அவர், கடந்த மாதம் 27-ந் தேதி இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் ‘காலா’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள மும்பை புறப்பட்டு சென்றார். அங்கு 11 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அதன் பின்னர் கடந்த 8-ந் தேதி மீண்டும் அவர் சென்னை திரும்பினார்.
இதையடுத்து 2-வது கட்டமாக ‘காலா’ படத்தின் படப்பிடிப்புக்காக சென்னையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் மும்பைக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-
‘காலா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் மீண்டும் ரசிகர்களை செப்டம்பர் மாத இறுதியில் அல்லது அக்டோபர் மாதத்தில் சந்திப்பேன். முதல் கட்டமாக ‘காலா’ படப்பிடிப்பு முடிந்து உள்ளது. மீண்டும் படப்பிடிப்பு நாளை (அதாவது இன்று) முதல் தொடங்குகிறது. 5 நாள் வரை படப்பிடிப்பு நடக்க உள்ளது.
என்னை சந்தித்து பேசி விட்டு வருபவர்கள் நான், அரசியல் பற்றி பேசியதாக கூறுவதை நான் மறுக்கவில்லை. நான் அரசியலுக்கு வர நேர்ந்தால், அப்போது உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன்.
நான் அரசியலுக்கு வருவது பற்றி பேசிக்கொண்டு இருக்கிறேன். இதுவரை நான் எந்தவித முடிவும் எடுக்கவில்லை. முடிவு எடுத்தால் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன்பிறகு அவர், கடந்த மாதம் 27-ந் தேதி இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் ‘காலா’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள மும்பை புறப்பட்டு சென்றார். அங்கு 11 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அதன் பின்னர் கடந்த 8-ந் தேதி மீண்டும் அவர் சென்னை திரும்பினார்.
இதையடுத்து 2-வது கட்டமாக ‘காலா’ படத்தின் படப்பிடிப்புக்காக சென்னையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் மும்பைக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-
‘காலா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் மீண்டும் ரசிகர்களை செப்டம்பர் மாத இறுதியில் அல்லது அக்டோபர் மாதத்தில் சந்திப்பேன். முதல் கட்டமாக ‘காலா’ படப்பிடிப்பு முடிந்து உள்ளது. மீண்டும் படப்பிடிப்பு நாளை (அதாவது இன்று) முதல் தொடங்குகிறது. 5 நாள் வரை படப்பிடிப்பு நடக்க உள்ளது.
என்னை சந்தித்து பேசி விட்டு வருபவர்கள் நான், அரசியல் பற்றி பேசியதாக கூறுவதை நான் மறுக்கவில்லை. நான் அரசியலுக்கு வர நேர்ந்தால், அப்போது உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன்.
நான் அரசியலுக்கு வருவது பற்றி பேசிக்கொண்டு இருக்கிறேன். இதுவரை நான் எந்தவித முடிவும் எடுக்கவில்லை. முடிவு எடுத்தால் உங்களுக்கு தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X