search icon
என் மலர்tooltip icon
    • யாருடைய தலையீடு இருந்தாலும் அச்சமின்றி தங்கள் பணி களை மேற்கொள்ள வேண்டும்.
    • மருத்துவர்கள் முழுமையாக கண்காணித்து சிகிச்சை அளித்திட வேண்டும்.

    விழுப்புரம்:

    அமைச்சர் பொன்முடி, மாவட்ட கலெக்டர் டாக்டர் சி.பழனி தலைமை யில், விழுப்புரம் நாடாளு மன்ற உறுப்பினர் ரவிக்குமார், எம்.எல்.ஏ. க்கள் நா.புகழேந்தி, டாக்டர் லட்சு மணன் ஆகியோர் முன்னி லையில், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலு வலக கூட்டரங்கில், கள்ளச் சாராயம் கட்டுப்படுத்து வது குறித்து மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கைகள் குறித்து காவல்துறை, வருவாயத்துறை மற்றும் மருத்துவத்துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடை பெற்றது. அப்போது அமைச்சர் பொன்முடி தெரிவிக்கை யில், தமிழ்நாடு முதல்-அமைச்சர், கள்ளச்சாரா யத்தை கட்டுப் படுத்துவதில் எந்தவித சமரசமின்றி இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், கள்ளச்சாராயம் முற்றிலும் இல்லை என்ற நிலையினை உருவாக்கிடும் பொருட்டு தீவிர நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தொடர் நடவடிக்கையாக நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் வருவாய்த்துறையினைச் சேர்ந்தவர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் ஆகியோர் தங்கள் பகுதி களில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படு கின்றதா என்பது குறித்து கண்காணிப்பதோடு, கள்ளச்சாராயம் குறித்த தகவல் கிடைக்கப்பெ ற்றால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கோ அல்லது காவல்துறைக்கு முதல் தகவல் அளிப்ப வர்களாக செயல்பட வேண்டும்.

    மேலும், காவல்துறை யினைச் சேர்ந்தவர்கள் தங்கள் கட்டுப்பாட்டு பகுதி களுக்குள் எந்த சூழ்நிலையிலும் கள்ளச்சாராயத்தினை அனுமதி க்கக் கூடாது என்ற நிலைப்பாட் டினை எடுத்துக்கொண்டு உறுதியுடன் பணியாற்றிட வேண்டும். யாருடைய தலையீடு இருந்தாலும் அச்சமின்றி தங்கள் பணி களை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தி லுள்ள 9 சோதனை சாவடி களில் முழு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். கள்ளச்சாராயம் பயன் பாட்டிலிருந்து பொது மக்களை விடுவித்து பாது காப்பது போலீசாரின் கடமை மற்றும் பொறுப்பு ஆகும். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில், கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருப வர்கள் முழுமையாக குண மடைந்து அவரவர் வீடு களுக்கு திரும்பி சென்ற பின்பும் மருத்துவர்கள் முழுமையாக கண்காணித்து சிகிச்சை அளித்திட வேண்டும். சமய மேல்பாதி கிராம த்தில் உள்ள கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுபா ட்டின்கீழ் இயங்கி வருகிறது.

    இக்கோவிலில் அனைத்து சமூகத்தினரும் சமூக நீதியினை கடைப்பிடித்திடும் வகையில் அனை வரும் வழிபடு வதற்கான உரிமை தமிழ்நாடு அரசால் வழங்கப் பட்டுள்ளது. ஆகையால் அனைத்து தரப்பு மக்களும் கோவில் சென்று வழிபடு வதற்கு போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ள ப்படும். பொதுமக்களும் அரசால் மேற்கொள்ள ப்பட்டு வரும் நடவடிக்கை களுக்கு ஒத்து ழைப்பு வழங்கிட வேண்டும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். ஆய்வுக்கூட்டத்தில் ஐ.ஜ. கண்ணன், டி.ஐ.ஜி. பகல வன், போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) மோகன்ராஜ், கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்ச ந்தி ரன், திண்டி வனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா, விழுப்புரம் கோட்டாட்சி யர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • பண்ருட்டி அருகே தொழிலாளி கொலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சக்திவேல் உடனே அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறை விலக்கிவிட முற்பட்டார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழக்குப்பம் அய்யனார் கோவில் தெருவில் வசித்து வந்தவர் சக்திவேல்  (வயது 42)கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்த ஞானகுரு, ராஜசேகர் ஆகியோர் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தனர்.அப்போது அந்த பகுதியில் கொத்தனார் வேலை பார்க்கும் 4 பேர் அங்கு வந்து அவர்களும் ஏரியில் குளித்தனர். இந்நிலையில் ஏரியில் குளித்துக் கொண்டிருக்கும் போது ஞானகுரு, ராஜசேகர் ஆகியோருக்கும் கொத்தனார் 4 பேருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதைப் பார்த்த சக்திவேல் உடனே அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறை விலக்கிவிட முற்பட்டார். அப்போது சக்திவேலுக்கும் ஞானகுரு, ராஜசேகருகும் இடைேய தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஞானகுரு, ராஜசேகர் ஆகியோர கீழே கிடந்த கட்டையை எடுத்து சக்திவேலை பலமாக தாக்கியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சக்திவேல் மயங்கி கீழே விழுந்தார்.

    இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் இறந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் முத்தாண்டி குப்பம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து சக்திவேலை அடித்து கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த ஞானகுரு ,ராஜசேகரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் அய்யனார் கோவில் காப்பு காட்டில் தலைமறைவாக பதுங்கி இருந்த ஞானகுரு, ராஜசேகரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் இருவரையும் பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

    ×