என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
சென்னையில் சோதனை செய்யப்படும் ஹூன்டாய் சான்ட்ரோ
Byமாலை மலர்7 May 2018 7:18 AM GMT (Updated: 7 May 2018 7:18 AM GMT)
ஹூன்டாய் நிறுவனத்தின் 2018 சான்ட்ரோ கார் கடந்த சில மாதங்களாக சோதனை செய்யப்படும் நிலையில், சென்னையில் சோதனை செய்யப்படுகிறது.
சென்னை:
ஹூன்டாய் நிறுவனத்தின் ஹேட்ச்பேக் மாடலான புதிய சான்ட்ரோ இந்தியாவில் கடந்த சில மாதங்களாக சோதனை செய்யப்படுவது ஸ்பை படங்களில் தெளிவாக வெளியாகி வருகிறது.
புதிய கார் சான்ட்ரோ என்ற பெயர் கொண்டிருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்படாத நிலையில், முந்தைய மாடலின் வெற்றி மற்றும் சான்ட்ரோ பிரான்டு பெற்றிருக்கும் பிரபலம் காரணமாக இதே பயெர் புதிய மாடலிலும் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய 2018 சான்ட்ரோ இந்தியாவில் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக புதிய சான்ட்ரோவின் பல்வேறு புகைப்படங்கள் இணையத்தில் வலம் வந்திருக்கும் நிலையில், சென்னையிலும் புதிய சான்ட்ரோ சோதனை செய்யப்படுகிறது. இம்முறை எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் முந்தைய படங்களை விட தெளிவாக உள்ளது. புதிய சான்ட்ரோ முந்தைய மாடலை விட அகலமாகவும், பெரியதாகவும் இருக்கும் என தெரிகிறது.
அந்த வகையில் புதிய காரின் உள்புறம் அதிக இடவசதி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஹூன்டாய் ஹேட்ச்பேக் மாடல் ஹூன்டாய் நிறுவனத்தின் ஃப்ளூயிடிக் ஸ்கல்ப்ச்சர் 2.0 வடிவமைப்பு முறையை சார்ந்து இருக்கும் என கூறப்படுகிறது.
இதனால் புதிய காரில் கேஸ்கேடிங் முன்பக்க கிரில், ஃபாக் லேம்ப், அலாய் வீல்கள், ரிவர்ஸ் கேமரா மற்றும் எல்இடி டெயில் லேம்ப் உள்ளிட்டவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்புற வடிவமைப்பு முற்றிலும் மேம்படுத்தப்பட்டு புதிய கேபின், செமி டிஜிட்டல் டிஸ்ப்ளே, டிரைவர்-சைடு ஏர்பேக் மற்றும் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை கொண்டிருக்கும்.
இந்தியாவில் ஹூன்டாய் இயான் மற்றும் கிரான்ட் i10 மாடல்களுக்கு மத்தியில் புதிய சான்ட்ரோ அறிமுகமாகும் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய சான்ட்ரோ ரெனால்ட் க்விட், டாடா டியாகோ, மாருதி சுசுகி செலரியோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சான்ட்ரோ மாடலில் 1086சிசி பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படும் என்றும் இந்த இன்ஜின் 70 பிஹெச்பி பவர், 100 என்எம் டார்கியூ கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சான்ட்ரோ விலை இந்தியாவில் ரூ.3.5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
ஹூன்டாய் நிறுவனத்தின் ஹேட்ச்பேக் மாடலான புதிய சான்ட்ரோ இந்தியாவில் கடந்த சில மாதங்களாக சோதனை செய்யப்படுவது ஸ்பை படங்களில் தெளிவாக வெளியாகி வருகிறது.
புதிய கார் சான்ட்ரோ என்ற பெயர் கொண்டிருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்படாத நிலையில், முந்தைய மாடலின் வெற்றி மற்றும் சான்ட்ரோ பிரான்டு பெற்றிருக்கும் பிரபலம் காரணமாக இதே பயெர் புதிய மாடலிலும் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய 2018 சான்ட்ரோ இந்தியாவில் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக புதிய சான்ட்ரோவின் பல்வேறு புகைப்படங்கள் இணையத்தில் வலம் வந்திருக்கும் நிலையில், சென்னையிலும் புதிய சான்ட்ரோ சோதனை செய்யப்படுகிறது. இம்முறை எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் முந்தைய படங்களை விட தெளிவாக உள்ளது. புதிய சான்ட்ரோ முந்தைய மாடலை விட அகலமாகவும், பெரியதாகவும் இருக்கும் என தெரிகிறது.
அந்த வகையில் புதிய காரின் உள்புறம் அதிக இடவசதி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஹூன்டாய் ஹேட்ச்பேக் மாடல் ஹூன்டாய் நிறுவனத்தின் ஃப்ளூயிடிக் ஸ்கல்ப்ச்சர் 2.0 வடிவமைப்பு முறையை சார்ந்து இருக்கும் என கூறப்படுகிறது.
இதனால் புதிய காரில் கேஸ்கேடிங் முன்பக்க கிரில், ஃபாக் லேம்ப், அலாய் வீல்கள், ரிவர்ஸ் கேமரா மற்றும் எல்இடி டெயில் லேம்ப் உள்ளிட்டவை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்புற வடிவமைப்பு முற்றிலும் மேம்படுத்தப்பட்டு புதிய கேபின், செமி டிஜிட்டல் டிஸ்ப்ளே, டிரைவர்-சைடு ஏர்பேக் மற்றும் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை கொண்டிருக்கும்.
இந்தியாவில் ஹூன்டாய் இயான் மற்றும் கிரான்ட் i10 மாடல்களுக்கு மத்தியில் புதிய சான்ட்ரோ அறிமுகமாகும் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய சான்ட்ரோ ரெனால்ட் க்விட், டாடா டியாகோ, மாருதி சுசுகி செலரியோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சான்ட்ரோ மாடலில் 1086சிசி பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படும் என்றும் இந்த இன்ஜின் 70 பிஹெச்பி பவர், 100 என்எம் டார்கியூ கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சான்ட்ரோ விலை இந்தியாவில் ரூ.3.5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X