என் மலர்
தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படங்கள் மற்றும் சாகச காட்சிகள் நிறைந்த படங்களின் வருகை அரிதாக இருக்கும் நிலையில், இந்த இரண்டு அம்சங்களுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய படமாக உருவாகியுள்ளது "மரகத மலை."
அறிமுக இயக்குநர் எஸ். லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கி இருக்கிறார். மேலும், எல்.ஜி மூவிஸ்நிறுவனத்துடன் இணைந்து எஸ். லதா இந்தப் படத்தை தயாரித்தும் இருக்கிறார்.
இதில் நாயகனாக சந்தோஷ் பிரதாப் நடிக்க, நாயகியாக தீப்ஷிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், மாஸ்டர் சஷான்ந் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். அவரது நண்பனாக அரிமா வர்மன், குழந்தை நட்சத்திரமான கலைக்கோவர்மன், மகித்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மரகதமலை 18 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதை. புலி, பாம்பு, யானை, கொரில்லா குரங்கு ஆகிய விலங்குகளின் அனிமேஷன் காட்சிகளும் படத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. மேலும், தமிழ் சினிமாவில் இதுவரை காட்சிப்படுத்தாத டிராகனையும் அனிமேஷனில் தத்ரூபமாக வடிவமைத்திருப்பது இப்படத்தின் சிறப்பு அம்சமாகும்.
எல்.வி. முத்து கணேஷ் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திற்கு பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். பைஜு டான் பாஸ்கோ படத்தொகுப்பு செய்ய, பி. சண்முகம் கலை இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பாப்பி மாஸ்டர் மற்றும் சந்தோஷ் நடன காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு பா.விஜய், கே.டி. சேஷா பாடல்களை எழுதியுள்ளனர். கே. தண்டபானி நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். இந்த கோடை கொண்டாட்டமாக செவென்த் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கண்ணன் இந்த படத்தை ஏப்ரல் 3-ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.
- கியாஸ் சிலிண்டரின் விலையை மத்திய அரசு திடீரென ரூ.60 உயர்த்தி உள்ளது.
- சென்னையில் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.928.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே 14.2 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டரின் விலையை மத்திய அரசு திடீரென ரூ.60 உயர்த்தி உள்ளது. இதன் மூலம் சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.928.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
ஈரான் உடனான போர் பதற்றம் காரணமாக கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாது என கூறிய நிலையில், சிலிண்டர் விலையை மத்திய அரசு திடீரென உயர்த்தியுள்ளது.
இந்நிலையில், சமையல் கேஸ் சிலிண்டர் விலையை 60 ரூபாய் உயர்த்தியதையை திரும்பப் பெற கோரி சென்னை, குறளகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஒரு மாலை போட்டு பெரிய கோவிலை கட்ட ஆசைப்படுகிறேன்.
- எனக்கு இதற்கு மேல சொல்ல தெரியல.
சென்னை:
த.வெ.க. தலைவர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உருவாக்கியது.
விஜய் அரசியல் பயணத்தில் சந்திக்கும் முதல் தேர்தல் 2026 தேர்தல். இந்த நேரத்தில் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு செய்திருப்பது விவாதப் பொருளாகி உள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் இது போன்று மனுதாக்கல் செய்வது ஏன்? என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை எம்.பி. அர்ச்சுனா முதன் முதலாக சங்கீதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது:-
27 வருடம் காத்திருந்து ஒருவர் தனது வாழ்க்கையின் உச்சகட்டத்தில் நிற்கும் போது காலை வாரி விட்டீர்கள். நீங்கள் யாழ்ப்பாணத்தில் எந்த இடம் என்று சொல்லுங்கோ... அங்கு போய் ஒரு மாலை போட்டு பெரிய கோவிலை கட்ட ஆசைப்படுகிறேன். எப்படிப்பட்ட இனப்பிறப்பு என்று யோசித்து பாருங்கள். எனக்கு இதற்கு மேல சொல்ல தெரியல. ஒரு யாழ்ப்பாணத்து பாராளுமன்ற உறுப்பினராக யாழ்ப்பாணத்து தமிழனாக இதை நினைத்து வருத்தப்படுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அர்ச்சுனா எம்.பி.யின் வீடியோ பதிவு சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் "ஹேப்பி ராஜ்." இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். அவர் பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
இந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். மேலும், இந்தப் படத்தின் மூலம் 11 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு அப்பாஸ் கம்பேக் கொடுக்கிறார். இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ஹேப்பி ராஜ் படத்தின் முதல் பாடலான "ஆடினே இருப்பேன்" சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தப் பாடலில் அஜித் குமார் ரேசிங், பென்குயின் என சமீபத்திய டிரெண்டிங் சம்பவங்களின் காட்சிகள் சேர்க்கப்பட்டன. ஜஸ்டின் பிராபகரன் இசையில் துல்லலான பாடலாக "ஆடினே இருப்பேன்" அமைந்தது. முதல் பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஹேப்பி ராஜ் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
அதன்படி ஹேப்பி ராஜ் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் `துரு துரு' நாளை மாலை 5.00 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் பாடலை விவேக் எழுத, கங்கை அமரன் பாடியுள்ளார். முதல் பாடலை போன்றே இரண்டாவது பாடலும் பெரும் வரவேற்பை பெறும் என்று தெரிகிறது.
- ஜெய்ப்பூரைச் சேர்ந்த அதிதி ஒரு மாடல் மற்றும் தொழில்முனைவோர் ஆவார்.
- கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவி வந்தன.
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் போது அனைத்து வீரர்களும் தனது குடும்பத்தினருடன் மைதானத்தில் வெற்றியை கொண்டாடி மகிழந்தனர்.
அந்த வகையில் இஷான் கிஷன் தனது நீண்டகால காதலியான அதிதி ஹுண்டியாவை மைதானத்தில் அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்.
மைதானத்திற்கு வந்த அதிதி ஹுண்டியாவுடன் இணைந்து இஷான் கிஷன் வெற்றியைப் பகிர்ந்து கொண்டார். மேலும் நடனமும் ஆடி மகிழ்ந்தனர். இறுதியாக இஷான் கிஷன் தனது காதலிக்கு மைதானத்தில் வைத்து ஒரு மோதிரை பரிசளித்து தனது காதலை தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த அதிதி ஒரு மாடல் மற்றும் தொழில்முனைவோர் ஆவார். இவர் 2017 'ஃபெமினா மிஸ் இந்தியா' இறுதிப் போட்டியாளர் மற்றும் 2018 'மிஸ் திவா சூப்பர்நேஷனல்' பட்டத்தை வென்றவர்.
கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில், உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் போது இருவரும் ஒன்றாகக் கொண்டாடியது இவர்களது உறவை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது.
முன்னதாக பிப்ரவரி 2026-ல், இஷான் கிஷனின் தாத்தா அனுராக் பாண்டே அளித்த பேட்டியில், இஷான் மற்றும் அதிதியின் காதலை குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டதாகவும், அவர்களுக்குத் திருமணத்தில் விருப்பம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.
சுமார் பத்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான 'தாய் கிழவி' படம் வெளியான முதல் 3 நாட்களில் ரூ.22 கோடி வசூலித்து சாதனை படைத்தது.
இந்நிலையில், 'தாய் கிழவி' படம் வெளியான 10 நாட்களில் உலக அளவில் ரூ.50 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
இப்படத்தை தொடர்ந்து கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் படத்தை சிவகுமார் முருகேசன் இயக்க உள்ளார். இதன் அறிமுக டீசர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
- நல்லவனுக்கு தீயவர்களிடம் இருந்து தன்னை காத்துக் கொள்வதே பெரும் பாடாக இருக்கின்றது.
- நம்ப வேண்டும், கடைபிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது.
மனிதன் முழு மனநிம்மதியுடன் வாழ்ந்தான்' -என்பது எந்த காலத்திலாவது ஒத்து வந்த வார்த்தையா- வாக்கியமா என்று பார்த்தால் சற்று யோசித்து தான் பார்க்க வேண்டும். ஆமாம்... என்று முழுமையாக மனம் ஒப்புக் கொள்ளவில்லை. ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம் நல்லவனோ, தீயவனோ இரு பிரிவினருமே 'நிம்மதி' இல்லாமல்தான் வாழ்ந்துள்ளனர். நல்லவனுக்கு தீயவர்களிடம் இருந்து தன்னை காத்துக் கொள்வதே பெரும் பாடாக இருக்கின்றது. ஞானிகளையும், மகான்களையும் இந்த இடத்தில் நாம் பேசக்கூடாது.
அவர்கள் எல்லாம் கடந்தவர்கள். அதனால் தான் அவர்கள் சித்தர்கள், ஞானிகள், மகான்கள், முனிவர்கள் என குறிப்பிடப்படுகின்றனர். ஆக மனிதன் தனக்கு தேவையான ஒன்றிற்காக உயர் சக்தியினை நாடுகின்றான். வணங்குகின்றான். தன்னால் முடிந்த பரிகாரங்களை செய்து நடக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்கின்றான்.
நம்பினால் உறுதியான நம்பிக்கை இருந்தால் மலையினைக் கூட நகர்த்திவிட முடியும் என்ற ஆங்கில சொற்றொடர் உண்டு. அதன்படி நம் முன்னோர்கள், வழிகாட்டிகள் கூறிய உரிய வழி முறைகளை நாம் பின்பற்றி வருகின்றோம். அதனை பரிகாரங்கள் என்று சொல்கின்றோம். இதனைப் பற்றி வயதில் மூத்த ஒரு பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர், கூறியவற்றினை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன். அவர் இதனை ஆன்மீக நம்பிக்கை சார்ந்த பரிகாரங்கள் என்றார். இவை அவரவர் நம்பிக்கையினைப் பொறுத்தது. நம்ப வேண்டும், கடைபிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. பாரம்பரிய வழியில் வருவனவற்றை அவர் கூறினார். அவர் கூறியது மற்றும் படித்தவை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
* செவ்வாய்க்கிழமை சக்தி தேவிகளுக்குரியது. அன்று காளியம்மனை சிவப்பு மலர் சாற்றி தேன் சிறிது வைத்து எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் எதிர்மறை சக்திகள், மன அழுத்தம் நீங்கும் என்றார். சிறு வெல்ல துண்டு, கற்கண்டு கூட வைக்கலாம். சர்க்கரை பொங்கல், மசால் வடை காளிக்கு பிடித்தமானவை.
* அமாவாசை அன்று எள் தீபம் ஏற்றுவது பித்ருகள் மற்றும் சூட்சும சக்திகளுக்குரிய நாள். கருப்பு எள், நல்லெண்ணை இட்டு தீபம் ஏற்றுவது பித்ரு தோஷ நிவாரணத்திற்கும், மறைமுக தடைகள் நீங்கவும் செய்யப்படுகின்றது.
* விபூதி மனிதனின் நிலையற்ற வாழ்வினை உணர்த்தும். மனக்கட்டுப்பாடு, வைராக்கியத்தினைத் தரும்.
* அமாவாசை அன்று பித்ரு தர்ப்பணம் செய்வது குடும்பத்தில் தொடர்ச்சியாக வரும் தடைகள், மனச்சோர்வு, வம்ச தோஷம் ஆகியவை குறைய உதவும்.
* செவ்வாய், சனிக்கிழமைகளில் ராகு காலத்தில் மந்திரஜபம் செய்வது திருஷ்டி, பயம், பகை இவற்றினைக் குறைக்கும்.

* கறுப்பு உளுந்து சனிக்கிழமைகளில் தானம் செய்ய சனி சம்பந்தமான தோஷங்களை நீக்கும்.
* துர்கா கவசம் படிப்பது பாதுகாப்பு கவசம்.
* வீட்டில் அன்றாடம் முடிந்தால் நெய் தீபம் ஏற்றலாம்.
* சிவனுக்கு விளக்கு காணிக்கை செய்வது கர்ம வினைகளை குறைக்கும் என ஆகமங்கள் கூறுகின்றன.
* நவதானியங்களை தானம் செய்வது நவக்கிரக தோஷங்களை குறைக்கும். ஒவ்வொரு தானியமும் 100 கிராம் இருந்தால் கூட போதும்.
* பஞ்சமுக ஆஞ்சநேயர் வழிபாடு பயம், திடீர் அபாயம் இவைகளை வெகுவாய் குறைக்கும்.
* பைரவருக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்வது கோப சக்தியை சாந்தப்படுத்தும் என்று சொல்லப்படுகின்றது.
* வேப்பிலை தீய சக்திகளை விரட்டும் என்பது நாட்டுப்புற ஐதீகம். காளி,மாரியம்மன் வழிபாட்டில் முக்கியம்.
* கால பைரவருக்கு எள் தீபம் ஏற்ற கால தோஷம், திடீர் தடைகள் குறையும்.
* சனி பகவானுக்கு எள் எண்ணை தீபம் ஏற்ற வேலை தாமதம், மன அழுத்தம் குறையும்.
* கருப்பு ஆடை தானம் செய்வது சனி பாதிப்பை குறைக்கும்.
* அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது பாரம்பரிய படையல் போடுவதால் நோய், தொற்று, குடும்ப அச்சம் நீங்கும்.
* 'ஓம் நமச்சிவாய'- ஆன்மீக உயர்வு தரும்.
* வீட்டில் வடகிழக்கு திசையில் விளக்கு ஏற்றுவது வாஸ்து தோஷத்தினை நீக்கும்.
* தாமிரம் உலோகம் காந்த சக்தி போல் செயல்படும்.
* அன்னதானம்-மகா சக்தி, பெரிய புண்ணியம்.
* வெள்ளிக்கிழமை பால் பாயாசம் நைவேத்தியம் அம்பாளுக்கு உகந்தது.
* சனி பகவானுக்கு நல்ல எண்ணை (எள் எண்ணை) அபிஷேகம் சிறந்தது.
* சிவ பூஜைக்கு வில்வம் அவசியமானது.
* சிவனுக்குச் செய்யும் தேன் அபிஷேகம் வாக்கு இனிமை, மன அமைதி தரும்.
* தினமும் நாம ஜபம் செய்வதால் மனக் கட்டுப்பாடு கிடைக்கும்.

கமலி ஸ்ரீபால்
* அம்மன் கோவிலில் குங்கும தானம் செய்வது பெண் சக்தி அனுக்கிரகம் கிடைக்கும்.
* பைரவருக்கு வெல்லம் நிவேதனம் செய்வது கோப சக்தியினை சாந்தம் செய்யும்.
* அமாவாசை அன்று மவுன விரதம் இருப்பதால் உள் உணர்வு அதிகரிக்கும்.
* சிவ பூைஜயில் வெள்ளை மலர் இருந்தால் சமத்துவ குணம் பெருகும்.
* துர்கா அஷ்டோத்ரம், நாம ஜபம் இவை தினமும் பாதுகாப்பு தரும்.
* சிவ ராத்திரியில் முழு இரவு ஜபம் ஆன்மீக உயர்வு தரும்.
* நாக பிரதிஷ்டை செய்வது வம்ச நன்மை தரும்.
* சிவனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வது ஆரோக்கியம் தரும்.
* துர்க்கைக்கு விளக்கு தானம் செய்வது வாழ்க்கையை ஒளி மயமாக்கும்.
* குல தெய்வ பூஜை ஆண்டுக்கொரு முறையாவது செய்ய வேண்டும்.
* ஸ்ரீ சக்தி நவாவரண பூஜை உயர்ந்த சக்தி தரும்.
* பைரவருக்கு தேங்காய் தீபம் ஏற்றுவது திடீர் தடைகளை நீக்கும்.
* வெள்ளிக்கிழமை-ஸ்ரீ சக்ர பூஜை- ஸ்ரீ சக்ரம் லலிதா பரமேஸ்வரியின் எந்திர வடிவம். வெள்ளிக்கிழமை பூஜை செய்தால் மனநிலை உறுதியாய் இருக்கும். குடும்பம் அன்புடன் ஒற்றுமையுடன் இருக்கும். செல்வ நிலை பெருகும் என நம்பப்படுகின்றது.
* ஓம் நமசிவாய என்ற பஞ்சாட்சரம் சிவ தத்துவத்தின் சாரம். சிவராத்திரி அன்று ஜபம் செய்வதால் கர்ம வினைகள் குறையும் என அனுபவங்கள் கூறுகின்றன.
* தினமும் குங்குமம் கொண்டு லலிதா தரிஸதி சொல்லி வீட்டிலேயே பாராயணம் செய்தால் பெண்களுக்கான மனம், உடல்நிலை நன்கு இருக்கும்.
* கறுப்பு எள் தானம் செய்வது சனி, ராகு சம்பந்தமான தோஷங்களை நீக்கும். எள்ளு பொடி சாதம் செய்து கொடுக்கலாம்.
* நவக்கிரக ஹோமம் என்பது ஒன்பது கிரகங்களையும் சமநிலைப்படுத்தி தடை, நோய், தாமதங்களை நீக்கும் என்பது நம்பிக்கை.
* குல தெய்வத்திற்கு நெய் தீபம் ஏற்றுவது நல்லது.
* துர்கா சப்தசதி பாராயணம் செய்வது எதிரிகள், பயம், மனதளர்வு ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு தரும் என்பது ஐதீகம்.
* சிவனுக்கு செய்யும் பால் அபிஷேகம் பாவ நிவாரணம், மன அமைதி தரும்.
* செவ்வாய்க்கிழமைகளில் சிகப்பு மலர் கொண்டு அம்மனுக்கு சமர்ப்பிக்கலாம். இது சக்தி ரூபம்.
* கால பைரவரை ஜபம் செய்ய பயம், திருஷ்டி நீங்கும்.
* எலுமிச்சை எதிர்மறை சக்திகளை நீக்கும் என நாட்டுப்புற நம்பிக்கை உள்ளது.
* பிரதோஷ நாளில் விளக்கேற்றுவது காரிய சித்தி தரும்.
* சர்ப்ப தோஷ நிவாரண பூஜை-நாக தேவதை வழிபாடு செய்வது குழந்தை பாக்கியம் தரும், திருமணத் தடை நீக்கும்.
* கால பைரவ அஷ்டகத்தினை படிப்பது திடீர் பயம், தடைகள் நீங்க உதவும்.
* தாமரை கொண்டு லட்சுமி வழிபாடு செய்வது செல்வம் தரும்.
* அம்மன் கோவிலில் வெற்றிலை தானம் செய்வது வாக்கு சக்தி அதிகரிக்கும்.
* தினமும் மன சுத்தியுடன் தியானம் செய்வது அனைத்து பரிகாரங்களின் சாரம் எனப்படுகின்றது.
இந்திய ஆன்மீக மரபில் பரிகாரங்கள் வாழ்வில் உடல், மனம், ஆன்மா இந்த மூன்றினையும் சமநிலைப்படுத்தும் வழிகளாகக் கருதப்படுகின்றன. இவை மந்திரம், எந்திரம், தந்திரம், பூஜை, விரதம், தானம், ஹோமம், ஜபம், தானம் போன்ற பல பிரிவுகளை உள் கொண்டவை. ஆகமங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள் மற்றும் தமிழ்நாட்டுப் புற வழிபாட்டு மரபுகள் ஆகியவற்றின் அடிப்படையில் உருவானவை இப்பரிகாரங்கள்.
வாழ்க்கையில் ஏற்படும் தடைகள், பயம், மன அமைதி குறைவு, குடும்ப சிக்கல், பொருளாதார நெருக்கடி, நோய், திருமண தாமதம், பித்ரு தோஷம், நாக தோஷம் போன்ற பல கஷ்டங்களுக்கு ஆன்மீகத் தீர்வாக இவை கருதப்படுகின்றன.
ஆயிரம், லட்சம் என பணம் செலவழிக்காமல் நாம் விரும்பும் உயர் சக்தி வடிவினை வணங்கி எளிய முறையில் பரிகாரங்கள் செய்யலாமே.
இவை மருத்துவ, உளவியல் சிகிச்சைகளுக்கு மாற்றாக கூறப்படவில்லை என்பதனையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இவை அனைத்தும் உடனே பலித்து விடும என்று கூறப்படவில்லை. உயர் சக்தியினை வேண்டும்போது அதற்கு பலன் இருக்கும். பரிகாரங்கள் மனம், உடலுக்கு பாதுகாப்பு தரும். உறுதியான மனமும், வலிவான உடலும் தந்து தடைகளை உடைத்து முன்னேறும், வெற்றி பெறும்.
தியான முறையும், பிரார்த்தனை முறையும், பக்தி முறையும் அனைத்து மதங்களிலும் அறிவுறுத்தப்படுகின்றது. ஒளி மயமான உயர் சக்தியை ஒருவர் என்ன பெயர் கொண்டு அழைத்தாலும் சக்தி வந்திறங்கும். நம்மை நாம் முன்னேற்றிக் கொள்ள செலவில்லாது நாமே செய்யும் பரிகாரங்களும் ஒரு வழியே என்பதனை அறிவோமாக.
- விஜய் 2 முறை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார்.
- புஸ்சி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகளும் சி.பி.ஐ. முன்பு ஆஜராகி உள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் 2 முறை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார்.
மேலும் இவ்வழக்கு தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளான புஸ்சி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகளும் சி.பி.ஐ. முன்பு ஆஜராகி உள்ளனர்.
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக நாளை ஆஜராக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே, விஜய் நடித்த 'ஜன நாயகன்' படத்தை இன்று மறுதணிக்கை செய்யப்படும் என அறிவித்த நிலையில், கமிட்டி உறுப்பினர்களில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாததால் படம் பார்ப்பது ஒத்திவைக்கப்பட்டது. மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் விஜய் இணைய வேண்டும் என அழுத்தம் தரப்படுவதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே கரூர் வழக்கிற்காக நாளை சி.பி.ஐ. முன் விஜய் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளதும் அரசியல் அழுத்தமே என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
- கல்லூரி சென்று, பின்னர் விஜய்யை பார்ப்பதற்காக வந்துள்ளார்.
- கல்லூரி மாணவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
தஞ்சாவூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்று, விபத்தில் சிக்கி திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், கல்லூரிக்கு செல்வதாகவே கூறிவிட்டு விக்னேஷ் சென்றதாகவும், கல்லூரி தரப்பிலிருந்து தனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் விபத்துக்குள்ளான மாணவனின் தந்தை கண்ணீர்மல்க பேட்டியளித்தார்.
இந்நிலையில், விஜயை பின்தொடர்ந்ததால் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞரை மருத்துவமனையில் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் நலம் விசாரித்தார். அப்போது அவரது மருத்துவ செலவுகளை ஏற்பதாகவும் அமைச்சர் உறுதி அளித்தார்.
- சாம்சன் 5 ஆட்டத்தில் 24 சிக்சர்கள் அடித்தார்.
- 20 ஓவர் உலகக் கோப்பையில் தொடர்ந்து 3 ஆட்டங்களில் 80 ரன்களுக்கு மேல் எடுத்த 2-வது வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
சஞ்சு சாம்சனுக்கு மறக்க முடியாத உலக கோப்பை இதுவாகும். உலக கோப்பையை வெல்ல அவரது அதிரடியான ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது.
அவர் 5 ஆட்டத்தில் 321 ரன் குவித்துள்ளார். இதில் 3 அரை சதம் அடங்கும். சராசரி 80.25 ஆகும். ஸ்டிரைக் ரேட் 199.37 ஆகும். இதனால் தொடர் நாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு கிடைத்தது.
இந்த தொடரில் சஞ்சு சாம்சன் பல சாதனைகளை புரிந்துள்ளார். 321 ரன் குவித்தது மூலம் ஒரு உலகக் கோப்பையின் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு விராட் கோலி 319 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது. சாம்சன் இந்த தொடரில் ரன் குவிப்பில் 3-வது இடத்தை பிடித்தார்.
சாம்சன் 5 ஆட்டத்தில் 24 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் ஒரு உலகக் கோப்பையில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதே தொடரில் 20 சிக்சர் அடித்த பின்ஆலன் (நியூசிலாந்து) 2-வது இடத்தில் உள்ளார்.
மேலும் சஞ்சு சாம்சன் 20 ஓவர் உலகக் கோப்பையில் தொடர்ந்து 3 ஆட்டங்களில் (97 ரன், 89 ரன். 89 ரன்) 80 ரன்களுக்கு மேல் எடுத்த 2-வது வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். ஏற்கனவே இலங்கையின் மஹேலா ஜெய வர்த்தனே 2010-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இச்சாதனையை செய்துள்ளார்.
89 ரன்கள் விளாசிய சாம்சன் 20 ஓவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த வீரராக திகழ்கிறார்.
நடப்பு உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் மொத்தம் 24 சிக்சர் (5 ஆட்டம்) விளாசி சிக்சர் மன்னனாக வலம் வருகிறார். ஒரு உலகக் கோப்பையில் அதிக சிக்சர் அடித்த வீரர் இவர் தான்.
- மாநாட்டிற்காக 3 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது.
- வெளியூர்களில் இருந்து வருகை தரும் 4 லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி:
திருச்சியில் இன்று நடைபெறும் தி.மு.க. மாநாடு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பெருமிதம் தெரிவித்தார்.
மாநாட்டு திடலில் இன்று காலை அவர் நிருபர்களிடம் கூறும் போது, மாநாட்டிற்காக 3 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வருகை தரும் 4 லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகள் உள்பட மத்திய மண்டத்தில் உள்ள 41 தொகுதிகளிலும் இந்தத் தேர்தலில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும்.
இது போன்ற மாநாடுகளைத் தொடர்ச்சியாக நடத்துவதன் மூலம் தலைவருக்கு கட்சி நிர்வாகிகளை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதோடு, அவர்களுக்கு கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து புதிய உத்வேகமும் கிடைக்கும் என்றார்.







