புதுச்சேரி

கோப்பு படம்.

பைக் மோதி கூலி தொழிலாளி பலி

Published On 2023-11-08 08:19 GMT   |   Update On 2023-11-08 08:19 GMT
  • அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே வந்த போது அதிவேகமாக வந்த பைக் சக்கரபாணியின் பைக் மீது வேகமாக மோதியது.
  • சக்கரபாணி சிகிச்சை பலன் இன்றி சக்கரபாணி பரிதாபமாக இறந்தார்.

புதுச்சேரி:

கண்டமங்கலம் அருகே ஆழியூர் பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி ( வயது50). இவர் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று சக்கரபாணி தனது மகளை கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அழைத்துச்சென்றார். பின்பு சர்வீஸ் சாலை வழியாக வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார்.

அப்போது கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே வந்த போது அதிவேகமாக வந்த பைக் சக்கரபாணியின் பைக் மீது வேகமாக மோதியது. இதில் சக்கரபாணி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து ேமல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சக்கரபாணி சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு சக்கரபாணி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News