புதுச்சேரி

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு- புதுச்சேரியில் கடும் போக்குவரத்து நெரிசல்

Published On 2024-05-19 09:06 IST   |   Update On 2024-05-19 09:06:00 IST
  • கோடை விடுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு படையெடுத்து வருகிறார்கள்.
  • வாகன ஓட்டிகள் அந்த பகுதியில் இருந்த போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி:

புதுச்சேரிக்கு வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.

தற்போது கோடை விடுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு படையெடுத்து வருகிறார்கள்.

சுற்றுலா பயணிகள் வருகையால் புதுச்சேரியின் பிரதான சாலைகளான அண்ணாசாலை, காமராஜர் சாலை, மறைமலையடிகள் சாலை, 100 அடி சாலை, புதுச்சேரி-கடலூர் சாலை, மரப்பாலம் சந்திப்பு, ராஜீவ்காந்தி மற்றும் இந்திராகாந்தி சதுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆங்காங்கே வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணி வகுத்து நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முடியாமல் போக்குவரத்து போலீசார் திணறினர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

இதற்கிடையே மரப் பாலம் சந்திப்பில் நீண்ட நேரமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள் அந்த பகுதியில் இருந்த போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு செல்வம் வாகன ஓட்டிகளை சமாதானம் செய்தார். அதன்பின் அப்பகுதியில் முதலியார்பேட்டை சட்டம்-ஒழுங்கு போலீசாரின் உதவியுடன் போக்குவரத்தை சரி செய்தனர்.

Tags:    

Similar News