புதுச்சேரி

புதுவையில் பொங்கல் பரிசு தொகை வழங்கப்படும்: முதல்-அமைச்சர் ரங்கசாமி

Published On 2026-01-07 13:03 IST   |   Update On 2026-01-07 13:03:00 IST
  • உயர்த்தப்பட்ட உதவித்தொகை வருகிற 12-ந் தேதி, அல்லது பொங்கலுக்கு பின் வழங்கப்படும்.
  • மஞ்சள் அட்டை குடும்ப தலைவிகளுக்கும் உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

எங்கள் அரசு பொறுப்பேற்ற பின் பல உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. பொதுப்பணி, உள்ளாட்சி மூலம் பல பணிகள் செய்யப்பட்டுள்ளது. புதுவை உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவது, நல்ல கல்வி, மருத்துவ வசதி, அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும் என்பதே அரசின் எண்ணம்.

மக்கள் கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கையை ஏற்று, சட்டசபை வாக்குறுதிகள் அனைத்தையும் அரசு நிறைவேற்றியுள்ளது. எல்லா தொகுதியிலும் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுவை மாநிலம் ஒட்டு மொத்த வளர்ச்சி பெற வேண்டும் என்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

4 பிராந்தியத்திலும் இன்னும் பல மக்கள் நல பணிகள் தொடங்கப்பட உள்ளது. நல்ல அரசாக செயல்பட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை தீர்க்கும் அரசாக செயல்பட்டு வருகிறது.

அரசின் எந்த உதவியும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதை உயர்த்தி ரூ.2 ஆயிரத்து 500 ஆக வழங்குவதாக அரசு அறிவித்தது. மாதந்தோறும் பெண்களுக்கு வழங்கப்படும் ரூ.1000-ம் முதலில் வழங்கப்படும். உயர்த்தப்பட்ட உதவித்தொகை வருகிற 12-ந் தேதி, அல்லது பொங்கலுக்கு பின் வழங்கப்படும். மஞ்சள் அட்டை குடும்ப தலைவிகளுக்கும் உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். முதியோர் உட்பட உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

இந்த தொகையும் விரைவில் உயர்த்தி வழங்கப்படும். புதுவையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொங்கலுக்கு எந்தளவுக்கு பரிசு தொகை தரமுடியுமோ அவை வழங்கப்படும். போலி மருந்து விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையாக அறிக்கை வெளியிடப்படும் என்றார். 

Tags:    

Similar News