உலகம்
துப்பாக்கிச்சூடு

இஸ்ரேலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி

Published On 2022-03-29 19:36 GMT   |   Update On 2022-03-29 19:36 GMT
மத்திய இஸ்ரேலில் அமைந்துள்ள டெல் அவிவ் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல் அவிவ்:

இஸ்ரேல் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள டெல் அவிவ் நகரில் இன்று மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் 5 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

Tags:    

Similar News