என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
இந்தியாவுக்கான பயண கட்டுப்பாடு மேலும் நீக்கம்- அமெரிக்கா அறிவிப்பு
Byமாலை மலர்29 March 2022 6:55 AM GMT (Updated: 29 March 2022 9:45 AM GMT)
இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளதால் இந்தியாவை நிலை 1-க்கு அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மாற்றி உள்ளது.
வாஷிங்டன்:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்தபோது பல்வேறு நாடுகள் பயண கட்டுப்பாடுகள் விதித்தன. சில நாடுகள் இந்தியாவுக்கான விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தியது. அமெரிக்காவும் இந்தியாவுக்கான பயணத்துக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. கொரோனா பரவல் காரணமாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதை பரிசீலனை செய்ய வேண்டும் என்று குடிமக்களை அமெரிக்கா அறிவுறுத்தியது.
அதன்பின் இந்தியாவுக்கு பயணம் செய்வதில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தியது.
இந்த நிலையில் இந்தியாவுக்கான பயண கட்டுப்பாடுகளை மேலும் அமெரிக்கா நீக்கம் செய்துள்ளது.
கொரோனா பாதிப்புள்ள நாடுகளை நான்கு வகையாக பிரித்துள்ளது. நிலை 4 பட்டியலில் உள்ள நாடுகளுக்கு கண்டிப்பாக பயணம் மேற்கொள்ளக்கூடாது என்று தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் கொரோனா அபாய பட்டியலில் இந்தியாவின் நிலை 3-ல் இருந்து நிலை 1-க்கு அமெரிக்கா மாற்றி உள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளதால் இந்தியாவை நிலை 1-க்கு அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மாற்றி உள்ளது.
நிலை 3-ல் இருந்து (உயர்) நிலை 1-க்கு (குறைவு) இந்தியா மாற்றப்பட்டுள்ளதால் அமெரிக்காவில் இருந்து பயணம் செய்வது எளிதாகி இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்தபோது பல்வேறு நாடுகள் பயண கட்டுப்பாடுகள் விதித்தன. சில நாடுகள் இந்தியாவுக்கான விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தியது. அமெரிக்காவும் இந்தியாவுக்கான பயணத்துக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. கொரோனா பரவல் காரணமாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதை பரிசீலனை செய்ய வேண்டும் என்று குடிமக்களை அமெரிக்கா அறிவுறுத்தியது.
அதன்பின் இந்தியாவுக்கு பயணம் செய்வதில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தியது.
இந்த நிலையில் இந்தியாவுக்கான பயண கட்டுப்பாடுகளை மேலும் அமெரிக்கா நீக்கம் செய்துள்ளது.
கொரோனா பாதிப்புள்ள நாடுகளை நான்கு வகையாக பிரித்துள்ளது. நிலை 4 பட்டியலில் உள்ள நாடுகளுக்கு கண்டிப்பாக பயணம் மேற்கொள்ளக்கூடாது என்று தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் கொரோனா அபாய பட்டியலில் இந்தியாவின் நிலை 3-ல் இருந்து நிலை 1-க்கு அமெரிக்கா மாற்றி உள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளதால் இந்தியாவை நிலை 1-க்கு அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மாற்றி உள்ளது.
நிலை 3-ல் இருந்து (உயர்) நிலை 1-க்கு (குறைவு) இந்தியா மாற்றப்பட்டுள்ளதால் அமெரிக்காவில் இருந்து பயணம் செய்வது எளிதாகி இருக்கிறது.
அதேபோல் கினியா மற்றும் நமீபியா நாடுகளும் நிலை 1-க்கு மாற்றப்பட்டுள்ளது. நிலை 1 என்பது தடுப்பூசி போடப்படாத அமெரிக்கர்களை மட்டும் அந்த நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு வலியுறுத்துகிறது.
இதையும் படியுங்கள்... எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X