உலகம்
பசில் ராஜபக்சேவுடன், மத்திய வெளியறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இந்தியாவின் ஆதரவு குறித்து இருவரும் விவாதித்தனர்.
கொழும்பு:
மாலத்தீவு சென்றிருந்த மத்திய வெளியறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தமது பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை சென்றார்.
கொழும்புவில் நாளை நடைபெறும் பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் மந்திரிகள் பங்கேற்கும் மாநாடில் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார்.
முன்னதாக இன்று கொழும்புவில் இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சேவை, ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
அப்போது, இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இந்தியாவின் ஆதரவு குறித்து இருவரும் விவாதித்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இந்தியாவிடம் நிதி உதவி கேட்டு கடந்த வாரம் இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே டெல்லி வந்திருந்த நிலையில், கொழும்புவில் ஜெய்சங்கர் அவரை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.