செய்திகள்
பயணக் கட்டுப்பாடு

இலங்கையில் இன்று முதல் பயணக்கட்டுப்பாடுகள் தளர்வு

Published On 2021-06-20 19:46 GMT   |   Update On 2021-06-20 19:46 GMT
அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலால் பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன.
கொழும்பு:

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து காணப்பட்டது. இதனால் கடந்த மே 21-ம் தேதி முதல் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பயணக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று முதல் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், மாகாணங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகளை தற்போதைக்கு தளர்த்த வேண்டாம் என இலங்கை மருத்துவ நிபுணர் குழு வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், அவர்களது எச்சரிக்கையும் மீறி இலங்கையில் இன்று முதல் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளன. 
Tags:    

Similar News