செய்திகள்
ஈரான் அணு ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் அலி அக்பர் சலிஹு

ஈரான் அணு ஆராய்ச்சி அமைப்பின் தலைவருக்கு கொரோனா

Published On 2020-10-12 16:27 GMT   |   Update On 2020-10-12 16:27 GMT
ஈரான் நாட்டின் அணு ஆராய்ச்சி அமைப்பின் தலைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெஹ்ரான்:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமானோருக்கு பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த கொடிய வைரசுக்கு உலக நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள், ராணுவ அதிகாரிகள் என அனைத்து தரப்பினருக்கு இலக்காகி வருகின்றனர். 

இந்நிலையில், ஈரான் நாட்டின் அணு ஆராய்ச்சி அமைப்பில் தலைவர் அலி அக்பர் சலிஹுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள அலி அக்பர் கடந்த 3-ம் தேதி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதையடுத்து அணு ஆயுத தயாரிப்பு, அணு ஆயுத செறிவூட்டல் நடவடிக்கையில் ஈரான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

ஈரானின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், அந்நாடு மீது பல்வேறு பொருளாதாரத்தடைகளையும் விதித்து வருகிறது.

ஈரானில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டின் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத்தடைகளை விதித்துள்ளது. மேலும், ஈரான் நாட்டின் வங்கிகள் அமெரிக்காவில் வைத்துள்ள சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News