செய்திகள்
ராணுவ அதிகாரிக்கு கொரோனா எதிரொலி- டிரம்புக்கு தினந்தோறும் பரிசோதனை
அமெரிக்க ஜனாதிபதியின் ராணுவ அதிகாரிக்கு கொரோனா உறுதியானதை அடுத்து தினந்தோறும் பரிசோதனை மேற்கொள்ள டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ராணுவ அதிகாரிக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, டிரம்புக்கும், துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது.
இதுகுறித்து டிரம்ப் நிருபர்களிடம் கூறியதாவது:-
எனது ராணுவ அதிகாரி நல்ல மனிதர். அவரை நான் அவ்வளவாக தொடர்பு கொண்டதில்லை. மைக் பென்சும் அப்படித்தான். இருப்பினும், நாங்கள் பரிசோதனை செய்து கொண்டோம். தினந்தோறும் பரிசோதனை செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ராணுவ அதிகாரிக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, டிரம்புக்கும், துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது.
இதுகுறித்து டிரம்ப் நிருபர்களிடம் கூறியதாவது:-
எனது ராணுவ அதிகாரி நல்ல மனிதர். அவரை நான் அவ்வளவாக தொடர்பு கொண்டதில்லை. மைக் பென்சும் அப்படித்தான். இருப்பினும், நாங்கள் பரிசோதனை செய்து கொண்டோம். தினந்தோறும் பரிசோதனை செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.