செய்திகள்
2 லட்சத்து 27 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை - கொரோனா அப்டேட்ஸ்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்தை கடந்துள்ளது.
ஜெனிவா:
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனாவை குணப்படுத்தும் வகையிலான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் இந்த வைரசின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் 32 லட்சத்து 5 ஆயிரத்து 972 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 19 லட்சத்து 82 ஆயிரத்து 745 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 59 ஆயிரத்து 807 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 9 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 300 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள நாடுகள்:-
அமெரிக்கா - 61,112
ஸ்பெயின் - 24,275
இத்தாலி - 27,682
பிரான்ஸ் - 24,087
இங்கிலாந்து - 26,097
ஜெர்மனி - 6,405
துருக்கி - 3,081
ஈரான் - 5,957
சீனா - 4,633
பிரேசில் - 5,466
கனடா - 2,985
பெல்ஜியம் - 7,501
நெதர்லாந்து - 4,711
சுவிட்சர்லாந்து - 1,716
ஸ்வீடன் - 2,462
அயர்லாந்து - 1,190
மெக்சிகோ - 1,569
இந்தியா - 1,008