செய்திகள்
8 லட்சத்து 76 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீட்பு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 8 லட்சத்து 76 ஆயிரம் பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.
ஜெனீவா:
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 76 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 29 ஆயிரத்து 88 ஆயிரத்து 772 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுத்துள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 19 லட்சத்து 5 ஆயிரத்து 559 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 57 ஆயிரத்து 583 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பரவியவர்களில் இதுவரை 2 லட்சத்து 6 ஆயிரத்து 725 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசில் இருந்து உலகம் முழுவதும் 8 லட்சத்து 76 ஆயிரத்து 488 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
வைரஸ் பாதிப்பில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளின் விவரங்கள்:-
அமெரிக்கா - 1,18,735
ஸ்பெயின் - 1,17,727
இத்தாலி - 64,928
பிரான்ஸ் - 44,903
ஜெர்மனி - 1,12,000
துருக்கி - 29,140
ஈரான் - 69,657
சீனா - 77,394
பிரேசில் - 30,152
கனடா - 17,239
பெல்ஜியம் - 10,785
சுவிட்சர்லாந்து - 21,300
ஆஸ்திரியா - 12,282