செய்திகள்
கொரோனா வைரஸ்

பாகிஸ்தானில் கொரோனாவுக்கு 228 பேர் பலி

Published On 2020-04-24 08:15 GMT   |   Update On 2020-04-24 07:50 GMT
பாகிஸ்தானில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 228-ஆக உள்ளது. மேலும் 10,500-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் ஊரடங்குக்கு மத்தியிலும் கொரோனா தனது கொடிய முகத்தை காட்டிக்கொண்டுதான் இருக்கிறது. அங்கு இந்த வைரஸ் தொற்றால் 10,500-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தனது கோரப்பிடியால் அங்கு 228 பேரை உயிரிழக்கச் செய்து உள்ளது.

அங்கு வைரஸ் தொற்றால் அதிகபட்சமாக பஞ்சாப் மாகாணத்தில் 4,500-க்கும் மேற்பட்டவர்களும், சிந்து மாகாணத்தில் 3,300-க்கும் அதிகமானவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானியர்களை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், மொத்தம் 46,500 பேர் நாடு திரும்புவதற்காக பதிவு செய்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News