செய்திகள்
80 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை... கொரோனா அப்டேட்ஸ்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளது.
ஜெனிவா:
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 209 நாடுகளுக்கு பரவியுள்ளது. வைரஸ் வேகமாக பரவி வருவதால் பெரும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 14 லட்சத்து 18 ஆயிரத்து 572 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 10 லட்சத்து 35 ஆயிரத்து 696 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 47 ஆயிரத்து 925 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 3 லட்சத்து 1 ஆயிரத்து 398 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 81 ஆயிரத்து 478 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள நாடுகள் சில வருமாறு:-
அமெரிக்கா - 12,548
ஸ்பெயின் - 13,897
இத்தாலி - 17,127
பிரான்ஸ் - 10,328
ஜெர்மனி - 1,983
சீனா - 3,331
ஈரான் -- 3,872
இங்கிலாந்து - 6,159
பெல்ஜியம் - 2,035
நெதர்லாந்து - 2,101
துருக்கி - 725
சுவிஸ்சர்லாந்து - 821
பிரேசில் - 667
ஸ்வீடன் - 591