செய்திகள்
கொரோனா பாதிக்கப்பட்ட நபரை கொண்டு செல்லும் காட்சி

இன்று ஒரே நாளில் 919 பேர் பலி - திணறும் இத்தாலி

Published On 2020-03-27 18:25 GMT   |   Update On 2020-03-27 18:25 GMT
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இத்தாலியில் இன்று ஒரே நாளில் 919 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரோம்:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 79 ஆயிரத்து 892 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 26 ஆயிரத்து 518 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், 4 லட்சத்து 22 ஆயிரத்து 698 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 676 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஐரோப்பிய நாடான இத்தாலியில் இந்த வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அந்நாட்டில் இன்று ஒரே நாளில் 919 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 134 ஆக அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News