செய்திகள்
விபத்தில் சிக்கிய பஸ்

மெக்சிகோ: பாலத்தின் மீது மோதிய பஸ் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழப்பு

Published On 2019-12-06 11:37 GMT   |   Update On 2019-12-06 11:37 GMT
மெக்சிகோ நாட்டின் சிஹுவாஹுவா மாநிலத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பாலத்தின் மீது மோதி கவிழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். சுமார் 30 பேர் காயமடைந்தனர்.
மெக்சிகோ சிட்டி:

மெக்சிகோ நாட்டின் சிஹுவாஹுவா மாநிலத்துக்குட்பட்ட டெலிசியாஸ்-சவுசில்லோ நெடுஞ்சாலை வழியாக சுமார் 50 பயணிகளுடன் நேற்று ஒரு பஸ் சென்றுக் கொண்டிருந்தது.

வழியில் ஒரு பாலத்தை  நெருங்கியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பாலத்தின் தூண் மீது பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் நிலைகுலைந்து பக்கவாட்டில் அந்த பஸ் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 32 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.

Tags:    

Similar News