செய்திகள்
கோப்புப் படம்

ஆப்கானிஸ்தான் - ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 18 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

Published On 2019-08-21 12:12 GMT   |   Update On 2019-08-21 12:12 GMT
ஆப்கானிஸ்தானின் தகார் மாகாணத்தில் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 18 பேர் கொல்லப்பட்டனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தானின் தகார் மாகாணத்தில் உள்ள  எஷ்காமிஷ் மாவட்டத்தில் தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து ராணுவத்தினர் நேற்று இரவு அவர்கள் மீது விமானப்படை மூலம் வான்வழி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் தலிபான் இயக்கத்தை சேர்ந்த 18 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 10 பயங்கரவாதிகள் படுகாயம் அடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஆப்கானிஸ்தான் பிரதமர்  அஷ்ரப் கனி ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் புகலிடங்கள் முற்றிலுமாக அழிக்கப்படும் என கூறியது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News