செய்திகள்
சீனாவில் நிலச்சரிவு - பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு
சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பீஜிங்:
சீனாவின் தென்கிழக்கு பகுதியில் குயிஸ்ஹோ மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்துக்குட்பட்ட லியு பன்ஷுய் நகரில் உள்ள மலை கிராமம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு 50-க்கும் அதிகமானவர்கள் வசிக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 21 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.
தகவலறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈட்பட்டு, 11 பேரை உயிருடன் மீட்டனர். நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது என்றும், மாயமானோரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் மீட்புக் குழுவினர் தெரிவித்தளனர்.