செய்திகள்
சீனாவை தாக்கிய சூறாவளியில் ஒரு பகுதி

சீனாவை தாக்கிய பயங்கர சூறாவளி - 6 பேர் பலி

Published On 2019-07-06 17:55 GMT   |   Update On 2019-07-06 17:55 GMT
சீனாவை தாக்கிய பயங்கர சூறாவளியில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பீஜிங்:

சீன நாட்டின் லியோனிங் மாகாணத்தில் கையுவான் என்ற நகரம் உள்ளது. அந்நகரில் இன்று பலத்த மழையுடன் சூறாவளி காற்று வீசியது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் சூறாவளியில் சிக்கி சின்னாபின்னமாகியது.

இந்த சூறாவளியின் கோரத்தாண்டவத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 190 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், மேலும் 28 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News