செய்திகள்

இலங்கையில் பயங்கரவாதிகளின் தற்கொலைப்படை பயிற்சி கூடம் கண்டுபிடிப்பு

Published On 2019-05-06 13:20 GMT   |   Update On 2019-05-06 13:26 GMT
இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினத்தன்று தாக்குதல் நடத்தி 253 பேரை கொன்ற மனித வெடிகுண்டுகள் பயிற்சிபெற்ற இடத்தை போலீசார் இன்று கண்டுபிடித்துள்ளனர். #Lankantrainingcentre #suicidebombers #Easterattacks
கொழும்பு:

இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனையின்போது 3 தேவாலயங்கள், 4 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த தாக்குதல்களில் 12 இந்தியர்கள் 253 பேர் உயிரிழந்தனர். 400-க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர்.

ஒரு பெண் உள்பட 9 பேர் மனித வெடிகுண்டுகளாக மாறி நடத்திய இந்த கொடூர தாக்குதல்களுக்கு பொறுப்பேற்ற தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாத இயக்கத்துக்கு இலங்கை அரசு தடை விதித்தது. தொடர்பாக போலீசார் நூற்றுக்கும் அதிகமானவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

இவர்களில் சிலர் அளித்த தகவலின் அடிப்படையில் ஈஸ்டர் தினத்தன்று தாக்குதல் நடத்திய மனித வெடிகுண்டுகள் பயிற்சிபெற்ற இடத்தை போலீசார் இன்று கண்டுபிடித்துள்ளனர்.

இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள நுவரெலியா பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்த தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாத இயக்கத்தினர் சுமார் 38 பேருக்கு இங்கு தற்கொலைப் படை தாக்குதல் நடத்த பயிற்சி அளித்துள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாக இருந்து திட்டமிட்டு செயல்படுத்தி மனித குண்டாக உயிரிழந்த ஜஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட பயங்கரவாதிகள் ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் 17-ம் தேதி இந்த ரகசிய இடத்தில் இறுதிக்கட்ட ஒத்திகை பார்த்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பயங்கரவாதிகளுக்கு இந்த இடத்தை வாடகைக்கு விட்ட வீட்டின் உரிமையாளர் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். #Lankantrainingcentre #suicidebombers #Easterattacks
Tags:    

Similar News