செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 11 போலீசார் பலி

Published On 2019-03-12 20:56 GMT   |   Update On 2019-03-12 20:56 GMT
ஆப்கானிஸ்தானில் போலீஸ் சோதனை சாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 11 போலீசார் பலியாகினர். #Afghanistan #TalibanMilitants
காபூல்:

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள பட்கிஸ் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கு இவர்கள் பாதுகாப்புபடை வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து தொடர் தாக்குதலை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், தலைநகர் குவாலா இ நவ்வில் முகூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடி மீது நேற்று முன்தினம் நள்ளிரவு தலீபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு போலீசார் பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 போலீசார் பலியாகினர். அதே சமயம் இந்த சண்டையின் போது பயங்கரவாதிகள் பலரும் கொல்லப்பட்டனர்.

ஆனால் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.  #Afghanistan #TalibanMilitants 
Tags:    

Similar News