செய்திகள்

பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் அதிரடி - தலீபான் தளபதி உள்பட 4 பேர் சுட்டுக்கொலை

Published On 2019-01-16 18:34 GMT   |   Update On 2019-01-16 18:34 GMT
பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் தலீபான் தளபதி உள்பட 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #Pakistan #Taliban
பெஷாவர்:

பாகிஸ்தானில் காஜி பம்ப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வீட்டை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.

அவர்களைக் கண்டதும் அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினர். பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர்.

இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதன் முடிவில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில் கைபர் பக்துங்வா மாகாணத்தின் ஜூமா பஜார் பகுதியில் ஷியா பிரிவினரின் வழிபாட்டுத்தலத்தில் கடந்த நவம்பர் மாதம் பயங்கரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 3 சீக்கியர்கள் உள்பட 31 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலில் மூளையாக இருந்து செயல்பட்ட பாகிஸ்தான் தலீபான் இயக்கத்தின் தளபதியான இஸ்லாம் உள்ளிட்ட 4 பேர்தான் காஜி பம்ப் பகுதியில் பாதுகாப்பு படையினருடனான துப்பாக்கிச்சண்டையில் பலியாகி உள்ளனர் என தெரியவந்துள்ளது. பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய மொகிபுல்லா என்பவரும் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் ஆவார்.

துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.  #Pakistan #Taliban
Tags:    

Similar News