செய்திகள்
பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பதை தடுக்கும் மசோதா ஈரான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்
ஈரான் பாராளுமன்றத்தில் பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பதை தடுக்கும் மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. #Iran #CounterTerrorFinanceBill
தெஹ்ரான்:
சர்வதேச அளவில் பணமோசடி மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்வதை கண்காணித்துவரும் சர்வதேச நிதி நடவடிக்கை செயற்குழு ஐக்கிய நாடுகளின் பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை தடுக்கும் கூட்டமைப்பில் ஈரானும் இணைய வலியுறுத்தியது.
இதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 143 வாக்குகள் பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பதை தடுப்பதற்காக அளிக்கப்பட்டன. இதையடுத்து, ஈரானுக்கு 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து வாக்கெடுப்பின்போது பேசிய ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி முகமது ஜவாத் ஷரிப், ஐ.நா. பயங்கரவாதிகளுக்கு நிதி அளிப்பதை தடுக்கும் கூட்டமைப்பில் ஈரான் இணைந்துவிட்டால் மட்டும் எல்லாம் சரியாகி விடாது, இருப்பினும், தற்போது தாங்கள் இணையாவிட்டால் எங்கள் மீது பழி சொல்ல அமெரிக்காவுக்கு அதிக சாக்கு கிடைத்துவிடும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், ஈரான் பாராளுமன்றத்தில் பயங்கரவாதிகளுக்கு நிதி அளிப்பதை தடுக்கும் சட்ட மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. #Iran #CounterTerrorFinanceBill
சர்வதேச அளவில் பணமோசடி மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்வதை கண்காணித்துவரும் சர்வதேச நிதி நடவடிக்கை செயற்குழு ஐக்கிய நாடுகளின் பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை தடுக்கும் கூட்டமைப்பில் ஈரானும் இணைய வலியுறுத்தியது.
இதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 143 வாக்குகள் பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பதை தடுப்பதற்காக அளிக்கப்பட்டன. இதையடுத்து, ஈரானுக்கு 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து வாக்கெடுப்பின்போது பேசிய ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி முகமது ஜவாத் ஷரிப், ஐ.நா. பயங்கரவாதிகளுக்கு நிதி அளிப்பதை தடுக்கும் கூட்டமைப்பில் ஈரான் இணைந்துவிட்டால் மட்டும் எல்லாம் சரியாகி விடாது, இருப்பினும், தற்போது தாங்கள் இணையாவிட்டால் எங்கள் மீது பழி சொல்ல அமெரிக்காவுக்கு அதிக சாக்கு கிடைத்துவிடும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், ஈரான் பாராளுமன்றத்தில் பயங்கரவாதிகளுக்கு நிதி அளிப்பதை தடுக்கும் சட்ட மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. #Iran #CounterTerrorFinanceBill