செய்திகள்

பிரான்சில் சினிமா தியேட்டருக்குள் புகுந்து மர்மநபர் கொலைவெறி தாக்குதல்

Published On 2018-09-19 05:52 GMT   |   Update On 2018-09-19 05:52 GMT
பிரான்சில் சினிமா தியேட்டருக்குள் புகுந்த மர்மநபர் ஒருவர், திடீரென பொதுமக்கள் மீது ஆவேசமாக கத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.
பாரீஸ்:

வடக்கு பிரான்சில் உள்ள தொழில்துறை நகரம் ரென்னீஸ். அங்கு கயுமெண்ட என்ற சினிமா தியேட்டர் உள்ளது. அங்கு நேற்றிரவு காட்சி நடந்து கொண்டிருந்தது.

உள்ளூர் நேரப்படி இரவு 10 மணியளவில் உள்ளே புகுந்த மர்மநபர் பொது மக்களை கத்தியால் தாக்கினான். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் பயத்தில் அலறியடித்து உயிர்பிழைக்க தப்பியோடினர்.

தகவலறிந்து அங்கு போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்தனர். கண்ணீர்புகை குண்டுகளை வீசி கூட்டத்தினரை போலீசார் கட்டுப்படுத்தினர்.

மேலும் தாக்குதலில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் கைது செய்தனர். ஆனால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை. தாக்குதலில் 2 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News