செய்திகள்

கம்போடியா பிரதமருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு - முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமானது

Published On 2018-08-29 11:40 GMT   |   Update On 2018-08-29 11:40 GMT
அரசுமுறை பயணமாக கம்போடியா நாட்டுக்கு வந்துள்ள வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் முன்னிலையில் இந்தியா - கம்போடியா இடையே இரு முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமானது. #SushmaSwaraj #SushmainCambodia
பினாம் பென்:

வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வியட்நாம், கம்போடியா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வியட்னாமில் இருநாட்கள் தங்கியிருந்த சுஷ்மா, நேற்று கம்போடியா வந்தார். தலைநகர் பினாம் பென் நகரில் அரசு மரியாதையுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கம்போடியா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி பாம் பின்ஹ் மின்ஹ் - சுஷ்மா சந்திப்பின்போது இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், முதலீடு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் ராணுவ உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன.

கம்போடியாவின் பிரேயா விஹியர் பகுதியில் உள்ள உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான சிவன் கோயிலை புதுப்பித்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.


இந்திய அயல்நாட்டுப் பணி கல்வி பயிற்சியகம் மற்றும் கம்போடியா  அயல்நாட்டுப் பணி, சர்வதேச உறவுகள் தொடர்பான பயிற்சியகம் இடையில் கூட்டுறவாக செயல்படுவது தொடர்பாக மேலும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையொப்பமானது.

பின்னர் கம்போடியா பிரதமர் ஹூன் சென்-ஐ சந்தித்த சுஷ்மா சுவராஜ் இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.  #SushmaSwaraj #SushmainCambodia 
Tags:    

Similar News