செய்திகள்

பிரிட்டன் பிரதமரின் பிரெக்சிட் கொள்கைக்கு எதிர்ப்பு- மேலும் 2 எம்.பி.க்கள் ராஜினாமா

Published On 2018-07-10 16:37 GMT   |   Update On 2018-07-10 16:37 GMT
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்வதாக 2 எம்.பி.க்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். #Brexit #UK
லண்டன்:

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்துக்காக பிரிட்டன் பல விஷயங்களை எளிதாக விட்டுக்கொடுக்கிறது என பிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் குற்றம்சாட்டியிருந்தார். மேலும், அவரும், வெளியுறவுத்துறை மந்திரி போரிஸ் ஜான்சன் ஆகியோரும் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்திருந்தனர்.

இதையடுத்து, டேவிட்டின் இடத்தில் டொமினிக் ராப்பை நியமித்து பிரதமர் தெரெசா மே உத்தரவிட்டார்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நிதி நடைமுறைகள் மற்றும் வர்த்தக தொடர்புகள் உள்பட்ட விவகாரங்கள் தொடர்பாக இறுதி முடிவெடுக்க வேண்டிய பிரிட்டன் நாட்டு மந்திரிகள் இருவரும் ராஜினாமா செய்துள்ள நிலையில், கட்சியின் துணைத்தலைவர் பதவியில் உள்ள 2 எம்.பிக்கள் இன்று தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

பென் பிராட்லே மற்றும் மரியா கால்ஃபீல்டு ஆகிய 2 எம்.பி.க்களும் பிரெக்ஸிட் விவகாரத்தில் தங்களது கட்சி பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். பிரெக்ஸிட் விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பலர் பதவி விலகி வருவதால், பிரெக்ஸிட் விவகாரம் திட்டமிட்டபடி முடிவுக்கு வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. #Brexit #UK
Tags:    

Similar News