செய்திகள்
வங்காளதேசம் - சாலை விபத்தில் 6 பேர் பலி
வங்காளதேசத்தில் காரும் ஆட்டோ ரிக்ஷாவும் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். #Accident
டாக்கா:
வங்காளதேசத்தின் மவுல்விபசார் மாவட்டத்தில் நடாம்பூர் பகுதியில் அமைந்துள்ளது மவுல்விபசார் - சிதெட் நெடுஞ்சாலை.
இந்த நெடுஞ்சாலையில் இன்று இரவு 7 மணியளவில் சென்று கொண்டிருந்த காரும் ஆட்டோ ரிக்ஷாவும் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் ஆட்டோ ரிக்ஷாவில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்து வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.