செய்திகள்

சிங்கப்பூர் உச்சநீதிமன்றத்தின் நீதித்துறை ஆணையராக இந்திய வம்சாவளி வழக்கறிஞர் நியமனம்

Published On 2018-06-28 09:03 GMT   |   Update On 2018-06-28 09:03 GMT
சிங்கப்பூர் நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி வழக்கறிஞரான டேடர் சிங் கில் அந்நாட்டின் உச்சநீதிமன்ற நீதித்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். #JudicialCommissioner #Singapore #DedarSinghGill
சிங்கப்பூர்:

சிங்கப்பூர் நாட்டில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞர் டேடர் சிங் கில். இவர் கடந்த 30 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணி புரிந்து வருகிறார். 59 வயதான டேடர் சிங் கில்லை, சிங்கப்பூர் நாட்டின் உச்சநீதிமன்றத்தில் நீதித்துறை ஆணையராக அந்நாட்டின் அதிபர் ஹலிமா யாகோப் நியமித்துள்ளார்.

2 ஆண்டுகள் நீதித்துறை ஆணையராக பொறுப்பு வகிக்க உள்ள டேடர் சிங், ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி பொறுப்பேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர், ஆசிய காப்புரிமை வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் என்பதும், காப்புரிமை ஆணையத்தின் துணை தலைவராக பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. #JudicialCommissioner #Singapore #DedarSinghGill
Tags:    

Similar News