செய்திகள்

போலீஸ் வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 8 போலீசார் பலி

Published On 2018-04-24 17:03 GMT   |   Update On 2018-04-24 17:03 GMT
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் போலீஸ் வாகனத்தின் மீது இன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 போலீசார் உடல் சிதறி உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத்: 

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில் போலீசாரை பணிக்கு ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது இன்று காலை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 

குவெட்டா நகரின் விமான நிலையப் பகுதியில் நடத்தப்பட்ட இந்த வெடிகுண்டு தாக்குதலில் எட்டு போலீசார் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 15-க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல், குவெட்டா நகரின் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் காயமடைந்தனர் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Tamilnews
Tags:    

Similar News