செய்திகள்

ரஷிய உளவுத்துறை அதிகாரியின் மகள் உடல்நிலை முன்னேற்றம் - மருத்துவமனை தகவல்

Published On 2018-03-29 15:25 GMT   |   Update On 2018-03-29 15:25 GMT
ரஷிய நாட்டின் உளவுத்துறை அதிகாரியின் மகளின் உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். #Russianintelligence
லண்டன்:

ரஷிய நாட்டின் ராணுவத்துறை உளவுப்பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (66). சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் இவர் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு பிரிட்டன் அரசு மீட்டு அடைக்கலம் கொடுத்தது. 

தற்போது பிரிட்டனில் வசித்து வரும் ஸ்கிர்பால், கடந்த 4-ந் தேதி சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது மகள் யூலியாவுடன் (33) மயங்கிய நிலையில் கிடந்தார். அவர்களது உடலில் மிகவும் கொடூரமான ‘மர்ம விஷம்’ ஏறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உளவுத்துறை அதிகாரி மற்றும் அவரது மகளுக்கு விஷம் ஏற்றியது தொடர்பாக பல நாடுகள் ரஷியாவை கண்டித்து அந்நாட்டு தூதர்களை திரும்ப அனுப்பியுள்ளது.

இந்நிலையில், லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யூலியாவின் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவரது தந்தை உடல் நிலை ஆபத்தான நிலையை தாண்டவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
#Russianintelligence #Tamilnews
Tags:    

Similar News