செய்திகள்

விடுதலைப் புலிகளின் தங்கப் புதையல் - வேட்டைக்குச் சென்று வெறுங்கையுடன் திரும்பிய இலங்கை அரசு

Published On 2018-03-21 16:09 GMT   |   Update On 2018-03-21 16:09 GMT
இலங்கையில் இறுதிகட்ட போரின் போது விடுதலைப்புலிகள் தங்கம் மற்றும் ஆயுதங்களை புதைத்து வைத்ததாக கூறப்பட்ட இடத்தை தோண்டும் பணியில் எதுவும் கிடைக்காததால் போலீசாருக்கு ஏமாற்றமே கிடைத்தது.
கொழும்பு:

இலங்கையில் உள்நாட்டு போரின் போது விடுதலைப்புலிகள் தங்கள் வசமிருந்த ஆயுதங்கள் மற்றும் தங்கக்கட்டிகளை மண்ணில் சுரங்கம் தோண்டி புதைத்து விட்டதாக நீண்ட காலமாக கூறப்பட்டு வந்தது. 

இந்நிலையில், தங்கம் மற்றும் ஆயுதங்களை தேடும் நோக்கில் ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் வடக்குப்பகுதியில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் மாவட்ட நீதிமன்ற அனுமதியுடன் புல்டோசர் மூலம் இன்று குழி தோண்டினர்.

மூன்று மணிநேரம் தோண்டிய நிலையில் குழிக்குள் இருந்து தண்ணீரே வந்தது. இதனால், ஏமாற்றமடைந்த போலீசார் மற்றும் ராணுவத்தினர் தோண்டும் பணியை நாளை வரை ஒத்திவைத்துள்ளனர். #TamilNews
Tags:    

Similar News