செய்திகள்

56 தமிழக மீனவர்களின் சிறை காவலை ஜனவரி 9 வரை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு

Published On 2017-12-26 13:11 GMT   |   Update On 2017-12-26 13:11 GMT
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 56 தமிழக மீனவர்களின் சிறை காவலை ஜனவரி 9 வரை நீட்டித்து ஊர்க்காவல் துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு:

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 56 தமிழக மீனவர்களின் சிறை காவலை ஜனவரி 9 வரை நீட்டித்து ஊர்க்காவல் துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 56 மீனவர்கள் அந்நாட்டின் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் அவர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் சிறை காவலை வரும் ஜனவரி 9-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News