search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலங்கை நீதிமன்றம்"

    • இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி விசைப்படகை சுற்றி வளைத்தனர்.
    • கைது செய்யப்பட்ட 10 பேரும் பருத்திதுறை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் அக்கரைபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு சொந்தமான விசைப்படகில், இவரும் மற்றும் அதே பகுதியை சேர்ந்த 9 பேரும் கடந்த மாதம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

    அவர்கள், இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி விசைப்படகை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்கனை கைது செய்து அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து வழக்கு அங்குள்ள இலங்கை பருத்திதுறை நீதிமன்றத்தில் நடைபெற்றது.

    இந்நிலையில் இன்று கைது செய்யப்பட்ட 10 பேரும் பருத்திதுறை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி நிபந்தனையுடன் அவர்கள் 10 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

    இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • தமிழக விசை படகை, அரசுடமையாக்கி இலங்கை நீதிபதி உத்தரவு.
    • விடுதலை செய்யப்பட்ட 14 மீனவர்களும் விரைவில் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள்.

    கொழும்பு:

    நாகை, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கடந்த 15ந் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து செல்வமணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் நெடுந்தீவு அருகே கடந்த 17-ந் தேதி இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி, விசைப்படகுடன் அவர்களை கைது செய்தனர்.

    பின்னர் இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபின் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்வதுடன், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

    இந்த நிலையில், யாழ்ப்பாணம் சிறையில் இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த 14 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்களது படகை அரசுடமையாக்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விடுதலை செய்யப்பட்ட 14 மீனவர்களும் விரைவில் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×