செய்திகள்

நியூ மெக்சிகோ பள்ளியில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு- 3 பேர் உயிரிழப்பு

Published On 2017-12-07 18:31 GMT   |   Update On 2017-12-07 18:32 GMT
நியூ மெக்சிகோ பகுதியில் உள்ள ஒரு உயர்நிலை பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நியூ மெக்சிகோ:

நியூ மெக்சிகோவின் வடமேற்கு பகுதியில் உள்ள அஸ்டெக் நகரில் ஒரு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் இன்று (வியாழக்கிழமை) துப்பாக்கியுடன் நுழைந்த ஒரு மர்மநபர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். இந்த சம்பவத்தில் சிலர் காயமடைந்ததாக தெரிகிறது.

இந்த சம்பவத்தையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அப்பகுதிக்கு விரைந்த போலீசார் அனைவரையும் வெளியேற்றி பள்ளி வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதோடு துப்பாக்கிச்சூடு நடத்திய நபரையும் போலீசார் சுட்டுக்கொன்றனர்.



இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் மாணவர்களா அல்லது ஆசிரியர்களா என்பது பற்றிய தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவத்தையடுத்து அந்த பள்ளியை மூடிய போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News